இந்திய ரயில்வே தனியார் மயமாக்கல் – மத்திய அமைச்சர் விளக்கம்!!
இந்திய ரயில்வே ஒருபோதும் தனியார் மயமாக்கப்படாது, ஆனால் ரயில்வே துறை சிறப்பாக செயல்பட தனியார் முதலீடுகள் தேவை என ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
ரயில்வே துறை:
மக்களவையின் இன்று நடைபெற்ற ரயில்வே துறைக்கான மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் ரயில்வே துறை தனியார் மயமாக்கல் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் பதில் அளித்தார். அப்போது கூறிய அவர், “2019 ஆம் ஆண்டிற்கு பின் ரயில் விபத்தில் ஒருவர் கூட இறக்கவில்லை. ரயில்வே துறை பயணிகள் மீது கூடுதல் அக்கறை கொண்டு சிறப்பாக செயலாற்றி வருகிறது.
TN Job “FB Group” Join Now
பொருளாதார மேம்பாட்டிற்கு அரசு துறை மட்டும் செயல்படாமல் தனியார் துறையினரும் செயல்பட்டால் தான் பொருளாதார வளர்ச்சி அடையும். மேலும் ரயில்வே துறையில் தனியார் முதலீட்டை வரவேற்க வேண்டும். இதன் மூலமாக ரயில்வே சேவையை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல முடியும். இருந்த போதிலும் இந்திய ரயில்வே ஒரு போதும் தனியார் மயமாக்கப்படாது.
பொது இடங்களில் மாஸ்க் அணியாவிட்டால் அபராதம் – தமிழக அரசு எச்சரிக்கை!!
அவை அரசின் கட்டுப்பாட்டின் மட்டுமே இருக்கும். ஆனால் ரயில்வே துறை சிறப்பாக செயல்பட தனியார் முதலீடுகள் அவசியம், 2019-20 ஆம் ஆண்டு ரயில்வே துறையில் 1.50 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டது. இது 2021-22 ஆம் ஆண்டில் ரூ.2.15 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது” இவ்வாறு அவர் தெரிவித்தார்.