சித்தா நர்சிங் படிப்புகளுக்கான நீட் தேர்வு – ஆசிரியர் சங்கத்தினர் கண்டனம்!!
நாடு முழுவதும் சித்தா மற்றும் நர்சிங் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்படுவதாக மத்திய அரசின் அறிவிப்பை எதிர்த்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலாளர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு கட்டாயம்:
நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வினை தேசிய தேர்வு முகமை நடத்துகிறது. இந்த தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே மருத்துவப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை வழங்கப்படும். இந்த ஆண்டு நீட் தேர்வு ஆகஸ்ட் மாதம் 1 ஆம் தேதி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மருத்துவப்படிப்புகளான எம்பிபிஎஸ், எம்.எஸ் படிப்புகளுக்கும், பல் மருத்துவப்படிப்புகளுக்கும், முதுகலை மருத்துவ படிப்புகளுக்கும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் இந்த ஆண்டு மத்திய அரசு சித்தா மற்றும் 4 ஆண்டுகள் நர்சிங் படிப்புகளுக்கும் நீட் தேர்வு முறை கட்டாயமாக்கப்படுவதாக தெரிவித்தது. இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலாளர் நா.சண்முகநாதன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,
12ம் வகுப்பு மாதிரி தேர்வுகள் தொடக்கம் – குறைந்த மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு சிறப்பு கவனம்!!
“தமிழகத்தில் நீட் தேர்வு முறை முழுவதுமாக ரத்து செய்யப்பட வேண்டும் என பல தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய அரசின் சித்தா, நர்சிங் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்படுவது பெரும் கண்டனத்திற்குரியது. இந்த அறிவிப்பு காரணமாக ஏழை எளிய மாணவர்களின் மருத்துவ கனவு சிதைக்கப்படுகிறது. எனவே மத்திய அரசு நீட் தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும்”, இவ்வாறு தெரிவித்துள்ளார்.