தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கு தயார் நிலை – கல்வித்துறை ஆய்வு!!

0
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கு தயார் நிலை - கல்வித்துறை ஆய்வு!!
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கு தயார் நிலை - கல்வித்துறை ஆய்வு!!
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கு தயார் நிலை – கல்வித்துறை ஆய்வு!!

தமிழத்தில் உள்ள பள்ளிகள் திறப்பதற்கு தயார் நிலையில் உள்ளதா என்பது பற்றி பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தற்போது நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். பொங்கல் பண்டிகை முடிந்து 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து கருத்துக்கேட்பு கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பள்ளிகள் திறப்பு:

கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாத இறுதியில் இருந்து தமிழகத்தில் பள்ளிகள் மூடப்பட்டு உள்ளது. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக அரசு சார்பில் ஆன்லைன் மற்றும் கல்வி தொலைக்காட்சி மூலம் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது கேரளா, கர்நாடகம், புதுச்சேரி, அசாம் உள்ளிட்ட பல மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன. தமிழகத்திலும் பள்ளிகளை விரைந்து திறக்க நடவடிக்கைகளை எடுக்குமாறு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

TNPSC குரூப் 1 தேர்வில் 6 தவறான வினாக்கள் – மதிப்பெண்கள் வழங்க தேர்வர்கள் கோரிக்கை!!

மேலும் வரும் ஜனவரி 8ம் தேதி வரை கருத்துக்கேட்பு கூட்டம் நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டு உள்ளது. அதில் பொங்கல் விடுமுறை முடிந்து 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பது குறித்து பரிந்துரைகள் பெறப்பட உள்ளன. இதனை வைத்து பள்ளிகள் திறப்பு குறித்து முடிவெடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார். இந்நிலையில் பள்ளிகளை மீண்டும் திறந்தால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட வேண்டும்.

அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் – தமிழக அரசு அறிவிப்பு!!

வகுப்பறை சுத்தம், கிருமிநாசினி தெளித்தல், குறைந்த அளவிலான மாணவர்கள் வருகை, சமூக இடைவெளி, முகக்கவசம், உடல் வெப்ப பரிசோதனை உள்ளிட்ட பல நெறிமுறைகள் உள்ளன. இதனால் தமிழகத்தில் உள்ள பள்ளிகள் திறப்பதற்கு தயாராக உள்ளதா? என்பது பற்றி தற்போது பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். சென்னை அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் நேரில் ஆய்வு செய்து வருகிறார்.

ஜனவரி 28ம் தேதி பொது விடுமுறை – தமிழக அரசு அறிவிப்பு!!

இதன் முடிவில் பள்ளிகள் திறப்பது குறித்து பரிந்துரை செய்யப்படலாம் என கூறப்படுகிறது. பின்னர் பெற்றோர்களின் கருத்து, மருத்துவ குழுவினர் பரிந்துரை ஆகியவற்றின் அடிப்படையில் பொங்கல் பண்டிகை முடிந்து 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!