அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் – தமிழக அரசு அறிவிப்பு!!
தமிழகத்தில் இன்னும் சில நாட்களில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அரசு சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பொங்கல் போனஸ்:
தமிழகம் முழுவதும் தமிழர் திருநாளான பொங்கல் வரும் ஜனவரி 14ம் தேதி முதல் கொண்டாடப்பட உள்ளது. கடந்த வருடம் முழுவதும் கொரோனா பரவலால் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளான நிலையில், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை வாழ்வில் செழிப்பை உண்டாக்கும் என காத்திருக்கின்றனர். அரசு சார்பிலும் பல்வேறு சலுகை அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. பொங்கல் பரிசாக ரூ.2500 மற்றும் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
TNPSC குரூப் 1 தேர்வில் 6 தவறான வினாக்கள் – மதிப்பெண்கள் வழங்க தேர்வர்கள் கோரிக்கை!!
இந்நிலையில் அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிக்கப்பட்டு உள்ளது. அரசு சி மற்றும் டி பிரிவு நிரந்தர மற்றும் தற்காலிக ஊழியர்கள், அரசு மானியம் பெறும் கல்வி நிறுவன ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி மன்ற பணியாளர்கள் என அனைவர்க்கும் ரூ.3000 போனசாக வழங்கப்பட உள்ளது. மேலும் தொகுப்பூதிய பணியாளர்கள், பகுதிநேர & முழு நேர சத்துணவு திட்ட, ஒருங்கிணைந்த குழந்தைகள் நலத்திட்ட ஊழியர்கள், கிராம உதவியாளர்கள் மற்றும் ஒரு பகுதி தினக்கூலியாக நிரந்தரமாக பணியாற்றியவர்களுக்கு ரூ.1000 போனஸ் தொகையாக வழங்கப்படும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் பள்ளிகளை உடனே திறக்க வேண்டும் – தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு கோரிக்கை!!
ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.500 முதல் ரூ.2000 வரை பொங்கல் போனஸ் வழங்கப்படும். அரசு ஊழியர்களுக்கு போனஸ் தொகையானது 31/03/2020 நாள் அன்று உள்ள ஊதியத்தின் அடிப்படையில், தற்காலிக மிகை ஊதியம் ரூ.3000 என்பதை உச்சவரம்பாக கொண்டு கணக்கிடப்படும்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
Ellaamae. Arasu oozhiyargalukku naanga ellaam pathu varusathukkum mela contract ka arasu vaelai thaan paarkkiroam aanaa oru salli kaasu kooda illa sambalam kooda moondru maasathukku oru murai allathu irandu maasathukku oru muraithaan
…