தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் – கல்வித்துறை எச்சரிக்கை!!
தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு தற்போது சிறப்பு வகுப்புகள் நடத்த பள்ளிகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. மேலும் கல்வி நிறுவனங்கள் மாணவர்களை கட்டாயப்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வித்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
சிறப்பு வகுப்புகள்:
தமிழகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்றுகள் அதிகரித்துள்ளதால் அனைத்து பள்ளி, கல்லூரிகளையும் தற்போது மூடுமாறு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் மாநிலத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் சிறப்பு வகுப்பு என்ற பெயரில் மாணவர்களை நேரடி வகுப்புகளில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கக்கூடாது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்காக, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து முன் அனுமதி பெறப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழக தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை – கல்விக்கட்டணம் செலுத்த பெற்றோர்கள் தயக்கம்!!
சுகாதார நிபுணர்களின் ஆலோசனையைப் பெற்ற பின்னர் தமிழக அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அறிவித்திருந்தது. பள்ளி மாணவர்களிடையே தொற்றுநோய்களின் அதிகரிப்பு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டது. தற்போது பள்ளிகள் ஆன்லைன் வழி கல்வியை தொடருமாறு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.
மதுரை காமராஜர் பல்கலை இணையவழி படிப்புகள் – யுஜிசி உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்!!
இருப்பினும் சென்னையில் சில தனியார் பள்ளிகள் 10 ஆம் வகுப்பு மாணவர்களை சிறப்பு வகுப்புகளில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தியதாக சில புகார்கள் வந்தன. இதனை பள்ளிக் கல்வித்துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த சிறப்பு வகுப்புகளில் கலந்து கொள்ளத் தவறினால், தங்கள் குழந்தைகளின் பெயர் வாட்ஸ்அப் குழுவிலிருந்து நீக்கப்படும் என்று சில தனியார் பள்ளிகளின் ஆசிரியர்கள், பெற்றோருக்கு செய்திகளை அனுப்பியுள்ளனர் என அவர் தெரிவித்தார்.
TN Job “FB Group” Join Now
இது பல பெற்றோர்களையும், மாணவர்களையும் கவலையடையச் செய்துள்ளது. இவ்வாறு அரசாங்க உத்தரவை மீறி செயல்படும் பள்ளிகளை மாவட்ட கல்வி அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது.
ஏப்ரல் 4 வரை முழு ஊரடங்கு உத்தரவு – மாநில அரசு அறிவிப்பு!!
2021 ஆம் ஆண்டு மார்ச் 31 அல்லது அதற்கு முன்னதாக மாணவர்கள் விடுதிகளை காலி செய்வதை உறுதி செய்ய கல்வி நிறுவனங்களின் நிர்வாகத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 12 ஆம் வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் தங்களது நடைமுறை பயிற்சித் தேர்வுகளை முடித்து பொதுத்தேர்வுக்கு தயாராக வேண்டி உள்ளது. பிற மாணவர்களுக்கு வாரத்தில் 6 நாட்கள் ஆன்லைன் வகுப்புகளை நடத்த புதிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன என கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.