மதுரை காமராஜர் பல்கலை இணையவழி படிப்புகள் – யுஜிசி உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்!!
பல்கலைக்கழக மானிய குழுவுடன் (UGC) இணைந்து மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் இணையவழி புதிய படிப்புகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
காமராஜர் பல்கலைக்கழகம்:
மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் அண்மையில் தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகாரக் குழுவின் ‘ஏ பிளஸ் பிளஸ்’ அங்கீகாரத்தை பெற்றது. உயர் கல்வி நிலையங்களில் உள்ள வசதிகள் தொழில்நுட்பம், கற்றல், கற்பித்தல் போன்றவற்றை மதிப்பீடு செய்து நாக் இந்த தர மதிப்பீடு வழங்குகிறது. இந்நிலையில் காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு இந்த தர நிர்ணயித்தை வழங்கியுள்ளனர்.
TN Job “FB Group” Join Now
மேலும் பல்கலைக்கழக நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பின்படி, “2021-22 ஆம் கல்வியாண்டில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 8 முதுகலை படிப்புகளுக்கும், 3 இளங்கலை படிப்புகளுக்கும், 7 பட்டய படிப்புகளுக்கும் இணைய வழியில் பாடங்களை நடத்த யுஜிசி அனுமதி வழங்கியுள்ளது. இந்த இணைய வழி திட்டங்களை எந்தவித தடை இல்லாமல் நடத்த பல்கலைக்கழகம் சார்பில் கற்றல் மேலாண்மை இணைய முகப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
நிஃப்ட் பேராசிரியர்களுக்கான எழுத்துத் தேர்வு – ஏப்ரல் 4ல் நடைபெறும்!!
இதற்காக மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் யுஜிசி உடன் புரிந்துணவு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த திட்டத்தை ஊக்குவிக்கும் நோக்கில் யுஜிசி நோடல் நிறுவனங்களில் ஒன்றான சிஇசி (கன்சோர்டியம் பார் எஜுகேஷன்) காமராஜர் பல்கலைக்கழகத்துடன் இணைந்து அடுத்த கல்வி ஆண்டு முதல் இந்த இணையவழி படிப்புகளை தொடங்க உள்ளது. இந்த ஒப்பந்தத்தில் யுஜிசியின் சிஇசி மையத்தின் இணை இயக்குனர் நாகேஸ்வர் மற்றும் காமராஜர் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் வி.எஸ்.வசந்தா ஆகியோர் கையெழுத்திட்டனர்.