ஏப்ரல் 4 வரை முழு ஊரடங்கு உத்தரவு – மாநில அரசு அறிவிப்பு!!
மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தாக்கம் காரணமாக பீட் மாவட்டத்தில் ஏப்ரல் 4 ஆம் தேதி வரை 10 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
முழு ஊரடங்கு அமல்:
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. தினசரி கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 50,000க்கு மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். அதில் குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் 35,952 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மகாராஷ்டிரா மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,48,604 ஆக பதிவாகியுள்ளது.
TN Job “FB Group” Join Now
மஹாராஷ்டிராவில் கொரோனா பரவல் காரணமாக பீட் மாவட்டத்தில் ஏப்ரல் 4 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து பீட் ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பின் படி, “மாவட்டத்தில் கொரோனா பரவல் காரணமாக ஏப்ரல் 4 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் உணவகங்கள், ஹோட்டல்கள், திருமண மண்டபங்கள் போன்றவை ஏப்ரல் 6 வரை மூடப்படும்.
தமிழகத்தில் ஏப்ரல் 6க்கு பின்னர் முழு ஊரடங்கு? சுகாதாரத்துறை விளக்கம்!!
பீட் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. சில தனியார் நிறுவன ஊழியர்கள் வீட்டில் இருந்தே வேலை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் மாவட்டம் முழுவதும் அடிப்படை தேவைகளான பால், மளிகை, காய்கறிகள் விற்கும் கடைகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பர்பனி மாவட்டத்தில் ஏற்கனவே மார்ச் மாதம் 24 ஆம் தேதியில் இருந்து 31 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.