தமிழக தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை – கல்விக்கட்டணம் செலுத்த பெற்றோர்கள் தயக்கம்!!
தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் அடுத்த கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், கல்விக்கட்டணம் செலுத்த பெற்றோர்கள் தயக்கம் காட்டுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அடுத்த கல்வியாண்டிலும் பள்ளிகள் திறக்கப்பட வாய்ப்புகள் குறைவு என்பதே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.
மாணவர் சேர்க்கையும், கல்விக்கட்டணமும்:
தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த வருட மார்ச் மாதத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பள்ளிகள் மூடப்பட்டன. இதனால் ஆன்லைன் நடத்தப்பட்டது. மேலும் ஊரடங்கு காலத்தில் தவணை முறையில் கல்விக்கட்டணம் வசூலிக்க வேண்டும் என தனியார் பள்ளிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. பெற்றோர்களை கட்டாயப்படுத்தி கட்டணம் வசூல் செய்யும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசு எச்சரித்தது. ஆனாலும் பல தனியார் பள்ளிகள் பெரும்பாலான பெற்றோர்களிடம் கடந்த கல்வியாண்டுக்கான கல்விக்கட்டணத்தை வசூலித்து விட்டன.
தமிழக அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் – மத்திய அரசு உத்தரவு!!
கொரோனா தொற்று குறைந்து பள்ளிகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்ட போதிலும் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்படவில்லை. தற்போது 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில், 9 முதல் 11ம் வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. தற்போது பல தனியார் பள்ளிகளில் அடுத்த கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
TN Job “FB Group” Join Now
நடப்பு கல்வியாண்டில் அடுத்த வகுப்புகளுக்கு தேர்ச்சி பெற்று செல்லும் மாணவர்கள் கல்விக்கட்டணம் செலுத்தவும் தனியார் பள்ளிகள் பெற்றோர்களை நிர்பந்திப்பதாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருவதால் பெற்றோர்கள் கல்விக்கட்டணம் செலுத்த தயக்கம் காட்டுகின்றனர். தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அடுத்த கல்வியாண்டில் பள்ளிகள் திறக்கப்பட வாய்ப்புகள் குறைவு தான் என கூறப்படுகிறது.
ஏப்ரல் 4 வரை முழு ஊரடங்கு உத்தரவு – மாநில அரசு அறிவிப்பு!!
இதன் விளைவாக பெற்றோர்கள் முழு கல்விக்கட்டணத்தையும் செலுத்த தற்போது தயக்கம் காட்டுகின்றனர். சிலர் ஒரு பகுதி கட்டணத்தை மட்டுமே செலுத்தி உள்ளனர். இதனால் தனியார் பள்ளிகள் ஆசிரியர்களுக்கு ஊதியம், அடிப்படை வசதிகள் உள்ளிட்டவற்றை செய்வதில் நிதி சிக்கல் நிலவுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.