தமிழகத்தில் 9, 10, 11ம் வகுப்புகளுக்கு விடுமுறை – பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை!!
தமிழகத்தில் 9, 10, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்குமாறு பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ள நிலையில், இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது.
பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்ட பள்ளிகள் 10 மாதங்களுக்கு பின்னர் கடந்த ஜனவரியில் மீண்டும் திறக்கப்பட்டது. முதற்கட்டமாக 10, 12ம் வகுப்புகளுக்கும் பின்னர் பிப்ரவரி 8ம் தேதி முதல் 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன. பள்ளிகளில் கொரோனா பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில் 9, 10, 11ம் வகுப்புகளுக்கு இறுதித்தேர்வு நடத்தப்படாமல் தேர்ச்சி வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
TN Job “FB Group” Join No
இருப்பினும் அவர்களுக்கான வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் 5 பள்ளிகளில் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. இது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 3 நாட்களாக கொரோனா பரவலின் 2வது அலை வேகமெடுக்க தொடங்கி உள்ளது.
தமிழக பள்ளிகளில் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகள் – முதன்மை செயலர் அறிவிப்பு!!
இதனால் 12ம் வகுப்பு தவிர 9, 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என பெற்றோர்கள், ஆசிரியர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். தற்போது சட்டமன்ற தேர்தல் பயிற்சி வகுப்புகளும் தொடங்கி உள்ளதால் ஆசிரியர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில் விடுமுறை அளிப்பது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
School open