தமிழக பள்ளிகளில் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகள் – முதன்மை செயலர் அறிவிப்பு!!
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் அதிகமாக பரவி வருவதால் பள்ளிகளில் கொரோனா கட்டுப்பாடு விதிகளை தீவிரப்படுத்த வேண்டும் என பள்ளிக்கல்வி முதன்மை செயலர் தீரஜ்குமார் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
பள்ளிகளில் கொரோனா:
2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் சீனாவின் ஒரு மூலையில் தொடங்கி உலகையே அச்சுறுத்தி வருகிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் வேகமாக பரவியது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. அதன் பின்னர் 10 மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படவில்லை. அதன் பின்னர் ஜனவரி மாதம் 19 ஆம் தேதி முதல் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகளும், பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் 9, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகளும் தொடங்கப்பட்டன.
TN Job “FB Group” Join No
மத்திய அரசு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள சில பள்ளிகளில் கொரோனா தாக்கம் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் அதிகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் விதத்தில் பள்ளிக்கல்வி முதன்மை செயலர் தீரஜ்குமார் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத்தேர்வு கட்டாயம் – AICTE தலைவர் அறிவிப்பு!!
அதில், “தமிழகத்தில் 9, 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. சில மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகமாக மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பரவி வருகிறது. இதனால் பள்ளிகளில் கொரோனா கட்டுப்பாடு விதிகளை தீவிரப்படுத்தப்பட வேண்டும். மாணவர்கள் பள்ளிக்கு வரும் போது கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும். மேலும் மாணவர்கள் சமூக இடைவெளி கடைபிடிக்க அறிவுறுத்தபட வேண்டும்.
தமிழகத்தில் கல்லூரிகளுக்கு ஏப்ரல் 20ம் தேதி விடுமுறை – டான்செட் தேர்வு எதிரொலி!!
பள்ளி நிர்வாகமும் பள்ளிக்கு வரும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களின் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்து அதனை கண்காணிக்க வேண்டும். மாணவர்கள் பள்ளி நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் கொரோனா கட்டுப்பாடு விதிகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டு வேண்டும்”, இவ்வாறு அவர் தெரிவித்தார்.