தமிழகத்தில் கல்லூரிகளுக்கு ஏப்ரல் 20ம் தேதி விடுமுறை – டான்செட் தேர்வு எதிரொலி!!
தமிழகத்தில் உள்ள பொறியியல் மற்றும் கலை, அறிவியல் கல்லூரியில் முதுகலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு TANCET தேர்வுகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளனர். 2021 ஆம் ஆண்டு TANCET தேர்வுகளுக்கான விண்ணப்பங்கள் அனுப்ப நாளை (18.03.2021) கடைசி தேதி ஆகும்.
TANCET தேர்வு அறிவிப்பு:
தமிழகத்தில் அரசு, தனியார் பொறியியல் கல்லூரிகள் மற்றும் கலை, அறிவியல் கல்லூரிகளில் உள்ள எம்இ, எம்டெக், எம்ஆர்க், எம்பிஏ, எம்சிஏ போன்ற முதுநிலைப் படிப்புகளில் சேர தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்வில் (TANCET) தேர்ச்சி பெற வேண்டும். 2021 ஆம் ஆண்டுக்கான TANCET தேர்வுகள் எம்சிஏ, எம்பிஏ படிப்புகளுக்கு மார்ச் மாதம் 20 ஆம் தேதியும், எம்இ, எம்ஆர்க் மற்றும் எம்.பிளான் படிப்புகளுக்கு மார்ச் 21 ஆம் தேதியும் நடத்தப்படுகின்றன.
TN Job “FB Group” Join Now
இந்த தேர்வுக்கான விண்ணப்ப பதிவு ஜனவரி மாதம் 19 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டன. இந்நிலையில் இந்த தேர்வுகளில் இறுதியாண்டு பயிலும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். கல்லூரி வேலை நாட்களில் இந்த தேர்வுகள் நடத்தப்பட உள்ளதால் மாணவர்கள் சிலர் கல்லூரிக்கு செல்லாமல் தேர்வுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஏற்கனவே கொரோனா காரணமாக கல்லூரிகள் 9 மாதங்களாக திறக்கப்படாமல் தற்போது தான் திறக்கப்பட்டுள்ளன.
ஏப்ரல் 1 ஆம் தேதிக்குள் பள்ளிகளை தயார்படுத்த வேண்டும் – தேர்தல் அலுவலர் அறிவுறுத்தல்!!
இந்த நேரத்தில் கல்லூரிகளுக்கு செல்லாத நிலை ஏற்பட்டதால் மாணவர்களுக்கு பாடங்களை தொடர்ந்து படிப்பதற்கு பாதிப்பு ஏற்படும் கூடவே TANCET தேர்வுகளிலும் கவனம் செலுத்த முடியாது. எனவே மாணவர்கள் சார்பில் மார்ச் மாதம் 20 ஆம் தேதி நடத்தப்படும் TANCET தேர்வுக்கு கலந்து கொள்ள அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.