பத்தாம் வகுப்பு முடித்தவரா? அஞ்சல் அலுவலகத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு!

0
பத்தாம் வகுப்பு முடித்தவரா? அஞ்சல் அலுவலகத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு!
பத்தாம் வகுப்பு முடித்தவரா? அஞ்சல் அலுவலகத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு!
பத்தாம் வகுப்பு முடித்தவரா? அஞ்சல் அலுவலகத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு!

தமிழக அஞ்சல் அலுவலகத்தில் காலியாக உள்ள அஞ்சல் ஆயுள் காப்பீட்டு பணிக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணிக்கு ஜூன் 26 ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து கொண்டு உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

அஞ்சல் அலுவலக வேலைவாய்ப்பு விவரங்கள்:

சென்னை தியாகராய நகரில் உள்ள சென்னை அஞ்சல் மத்திய கோட்டம் அலுவலகத்தில் ஆயுள் காப்பீட்டு முகவர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இப்பணியில் சேர விருப்பமுள்ளவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் நேர்காணலை மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர் .

Follow our Instagram for more Latest Updates

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களின் வயதானது 18 லிருந்து 50 க்குள் இருக்க வேண்டும். மேலும் ஆயுள் காப்பீடுகளை விற்பனை செய்வதில் முன் அனுபவம் உள்ளவர்கள், கணினிப் பயிற்சி பெற்றவர்கள் சொந்தப்பகுதி பற்றி நன்கு அறிந்தவர்கள் மற்றும் சென்னை மாநகராட்சியை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Kalakshetra Foundation நிறுவனத்தில் மாதம் ரூ.35,400/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு!

இந்த நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் தங்களின் 3 புகைப்படத்துடன் (பாஸ்போர்ட் அளவு), தங்களின் வயதுச்சான்று, முகவரிச்சான்று மற்றும் கல்விச்சான்றுடன் ஆகியவற்றின் அசல் மற்றும் 2 நகல்கள் ஆகியவற்றுடன் பங்கேற்க வேண்டும். முகவராக தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் சேகரிக்கும் பாலிசியின் பிரீமியம் அடிப்படையில் ஊக்கத்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Follow our Twitter Page for More Latest News Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!