தமிழக மாணவர்களுக்கான நான் முதல்வன் திட்டம் – உயர்கல்வி சிறப்பு முகாம்!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு உயர்கல்வி பயில வழிகாட்டும் வகையில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.
சிறப்பு முகாம்:
தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நான் முதல்வன் திட்டம் தொடங்கப்பட்டது. தற்போது இத்திட்டத்தின் வாயிலாக மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்த ஆலோசனை வழங்கும் வகையில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. தற்போது 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்று உயர்கல்வி பயிலவிருக்கும் மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உயர் கல்வி முகாம் நேற்று நடைபெற்றது.
TNUSRB SI, SSC CHSL & MTS தேர்வுகளுக்கு தயாராக போறீங்களா? – உங்களுக்கு நல்ல வாய்ப்பு இது தான்!
ஓசூர் ஆர்.வி. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் காலை தொடங்கி மாலை வரை நடைபெற்ற இந்த வழிகாட்டு முகாமில் ஏராளமான மாணவ மாணவியர்கள் பங்கேற்று ஆலோசனை பெற்றனர். அத்துடன் ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் ஆகியோர் பங்கேற்று மாணவர்களை ஊக்குவித்து உரையாற்றினர்.