“தமிழும் சரஸ்வதியும்” மற்றும் “காற்றுக்கென்ன வேலி” சீரியலில் அடுத்து வர போகும் ட்விஸ்ட் – வெளியான ப்ரோமோ!
விஜய் டிவி “தமிழும் சரஸ்வதியும்” மற்றும் “காற்றுக்கென்ன வேலி” சீரியலில், அடுத்து வர இருக்கும் சுவாரசியமான திருப்பங்கள் குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
தமிழும் சரஸ்வதியும்
தமிழும் சரஸ்வதியும் சீரியலில், அர்ஜுன் கோதையிடம் இந்த ஆர்டரை எப்படியாவது வாங்க தன்னிடம் ஒரு ஐடியா இருப்பதாக சொல்கிறார். அதாவது எல்லா கம்பெனியும் ஒரே மாதிரி இருக்கமாட்டாங்க, சில கம்பெனியில் ஆட்கள் இருப்பாங்க, அவங்களுக்கு காசு கொடுத்தால் போதும் என சொல்ல, உடனே கோதைக்கு அர்ஜுன் மீது சந்தேகம் வருகிறது. நேர்மையான வழி எதுவும் உங்க கண்ணிற்கு தெரியாதா, கம்பெனி பெயரை கெடுக்க பாக்குறீங்களா என கோதை கேட்க அர்ஜூனால் எதுவும் பேச முடியவில்லை. இந்நிலையில் இவர் எல்லாம் தப்பான வழியில் பேசுவதாக கோதை நினைக்க, இவர் ஏன் இப்படி நடந்து கொள்கிறார் என தெரியவில்லை என்று தமிழ் அப்பாவிடம் சொல்லிவிட்டு இனிமேல் இவர் செய்வதை நாம கண்காணிக்க வேண்டும் என கோதை சொல்கிறார்.
தமிழகத்தில் தியேட்டர் கட்டணம் உயர்வு – உரிமையாளர்கள் கோரிக்கை!
காற்றுக்கென்ன வேலி:
காற்றுக்கென்ன வேலி சீரியலில் வெண்ணிலா சூர்யாவை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார். இந்நிலையில் வெண்ணிலாவை நேருக்கு நேர் சந்தித்த சூர்யா, 100 சதவீதம் என்னை விட்டு போனவளுக்கு இப்போது என்னிடம் என்ன பேச்சு என கேட்க, உடனே வெண்ணிலா ஜூலை 10 உங்களுக்கு கல்யாணமா என கேட்கிறார். பின் வாழ்த்துக்கள் சொல்ல, உனக்கு கடைசியாக ஒன்று சொல்கிறேன். ஷிவானி கழுத்தில் தாலி கட்ட போகும் கடைசி நிமிடம் வரை நான் காத்திருக்கிறேன். நான் வேண்டும் என நினைத்தால் வாங்க என சொல்கிறார். அப்படி இல்லை உங்க கழுத்தில் இருப்பது வெறும் கயறு என நினைத்தால் வர வேண்டாம் என சொல்கிறார். என்னை முழுவதுமாக நம்பும் பொண்ணு எனக்காக காத்துக் கொண்டிருக்கும் போது நான் ஏன் உங்களை பற்றி நினைக்க வேண்டும் என சூர்யா அங்கிருந்து கிளம்புகிறார்.