பள்ளி மாணவர்களுக்கு 100 நாள் வெளிப்படை சவால்…பள்ளிகளுக்கு பறந்த தமிழ்நாடு அரசின் அதிரடி கடிதம்
தமிழக மாணவர்களிடையே கற்றல் திறன் கணிசமாக குறைந்து வருவதாக ஏசர் அமைப்பு சமீபத்தில் தகவல் ஒன்றை வெளியிட்டது. மேலும், அதன் ஆய்வில் கிராமப்புற பள்ளிகளில் பயிலும் 8 ஆம் வகுப்பு மாணவர்களில் 64% பேர் மற்றும் 5 ஆம் வகுப்பு மாணவர்களில் 35% பேர் இரண்டாம் வகுப்பு புத்தகத்தை கூட வாசிக்க தெரியாமல் உள்ளனர் என்று அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டுள்ளது.
இதனால், தமிழ்நாடு அரசு பள்ளி மாணவர்களின் கற்றல் திறன் குறித்த சவால்களை சமாளிப்பது குறித்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அதில், அரசு பள்ளி மாணவர்களின் அடிப்படை திறன்களை 100 நாட்களில் கற்பித்து வெளிப்படை சவாலுக்கு தயாராகுமாறு அழைப்பு விடுத்துள்ளது. இதனால், தமிழ்நாட்டில் உள்ள 4,557 அரசு பள்ளிகளில் அடிப்படை திறன்களின் வெளிப்படை சவாலுக்கு தயாராக பள்ளி கல்வித்துறை வலியுறுத்தியுள்ளது. அதன்படி, தமிழ் மற்றும் ஆங்கிலம் வாசித்தல், அடிப்படை கணக்கு திறன்கள் ஆகியவற்றை பள்ளி மாணவர்களுக்கு மேம்படுத்தவும் உத்தரவிட்டுள்ளது.


























