தமிழக அரசு ஊழியர்கள் கவனத்திற்கு – பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்த முக்கிய அறிவிப்பு!!
பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் ( CPS) இருந்து பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு (OPS) மாற விரும்பும் பணியாளர்கள் தங்களது விவரங்களை சமூக நல இயக்குனரகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பழைய ஓய்வூதியத் திட்டம்
தமிழக அரசுத்துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பல்வேறு திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் (CPS) கீழ் ஓய்வூதியம் பெறும் அரசு ஊழியர்கள் தங்களது விருப்பத்தின் பேரில் பழைய ஓய்வூதிய திட்டத்தின் (OPS) கீழ் ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்கலாம் என்று சமூக நல இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Follow our Twitter Page for More Latest News Updates
இது தொடர்பாக பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவில், 01.04.2003 தேதிக்கு பிறகு அரசுத் துறையில் சேர்ந்து தற்போது பணிபுரிந்து வரும் ஊழியர்கள் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் இருந்து பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். இதற்காக ஊழியர்கள் தங்களது பெயர், பதவி, பிறந்த தேதி, வேலையில் சேர்ந்த நாள் மற்றும் CPS எண் ஆகிய விவரங்களுடன் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து 01.03.2023 என்ற தேதிக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் மூலம் விண்ணப்பங்களை செலுத்தலாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.