தமிழக அரசு துறையில் 10,000 காலிப்பணியிடங்கள் – விரைவில் நிரப்பப்படும்.. வெளியான முக்கிய தகவல்!
தமிழக அரசு துறையில் தற்போது 10,000 மேற்பட்ட பொறியாளர் காலிப்பணியிடங்கள் உள்ளது. இப்பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
காலிப்பணியிடங்கள்:
தமிழகத்தில் அரசு துறை காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்புகள் அவ்வப்போது TNPSC தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டு வருகிறது. இத்தகைய காலிப்பணியிடங்களுக்கு உரிய தகுதி தேர்வு நடத்தப்பட்டு ஆட்கள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் தமிழக உள்ளாட்சி அமைப்பு மற்றும் குடிநீர் வடிகால் வாரியங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
தமிழக ரேஷன் கடைகளில் கோதுமை வழங்குவதில் சிக்கல்.. அரசுக்கு நெருக்கடி!
அதாவது இத்துறையின் கீழ் 10,000 மேற்பட்ட பொறியாளர் காலிப்பணியிடத்திற்கு ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளதாகவும், அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தமிழக செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை தகவல் தெரிவித்துள்ளது. நியமன முறைகள் குறித்து எந்த அறிவிப்புகளும் இதுவரை வரவில்லை விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது