தமிழக ரேஷன் கடைகளில் கோதுமை வழங்குவதில் சிக்கல்.. அரசுக்கு நெருக்கடி!

0
தமிழக ரேஷன் கடைகளில் கோதுமை வழங்குவதில் சிக்கல்.. அரசுக்கு நெருக்கடி!
தமிழக ரேஷன் கடைகளில் கோதுமை வழங்குவதில் சிக்கல்.. அரசுக்கு நெருக்கடி!
தமிழக ரேஷன் கடைகளில் கோதுமை வழங்குவதில் சிக்கல்.. அரசுக்கு நெருக்கடி!

மத்திய அரசு மாநிலங்களுக்கு கோதுமை இறக்குமதியை நிறுத்தி இருக்கும் நிலையில், தமிழகம் சார்பில் மாதம் 15000 டன் கோதுமை வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

கோதுமை கோரிக்கை

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் சுமார் 1.04 கோடி முன்னுரிமையற்ற கார்டுதாரர்களுக்கு மாதம் தலா 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. இந்நிலையில் மத்திய உணவு மற்றும் பொது வினியோக திட்டத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் அனைத்து மாநில உணவு துறை அமைச்சர்கள் மாநாடு நடந்தது. அதில் அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டு திறந்த வெளிச்சந்தை விற்பனை திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு 60,000 மெட்ரிக் டன் அரிசி வழங்க வேண்டும் எனவும், கோதுமை நுகர்வு அதிகமாக இருப்பதால் மாதம் ஒன்றுக்கு 15000 மெ. டன் கோதுமை ஒதுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

இது குறித்து அமைச்சர் பேசுகையில், தமிழகத்தில் கோதுமை நுகர்வு அதிகமாக இருப்பதால் பிற மாநிலங்களை எதிர்நோக்க வேண்டி இருக்கிறது. ஜூன் 2022 முதல் மாதம் 8,532 மெட்ரிக் டன் கோதுமை மட்டுமே தமிழ்நாட்டிற்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அத்துடன் கூடுதலாக 15,000 மெட்ரிக் டன் கோதுமையை அரிசிக்குப் பதிலாக எங்களுக்கு ஒதுக்கீடு செய்திட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

பொது சிவில் சட்டம் .. என்ன தான் சொல்லுது? – வலுக்கும் எதிர்ப்புகள்! வெடிக்கும் போராட்டங்கள்!

மேலும் தமிழகத்தில் தர்மபுரி மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் இரண்டு கிலோ ராகி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு போதுமான அளவு ராகி மற்றும் சிறு தானியங்கள் வழங்கினால் இது மற்ற மாவட்டங்களிலும் விரிவுபடுத்தப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!