பொது சிவில் சட்டம் .. என்ன தான் சொல்லுது? – வலுக்கும் எதிர்ப்புகள்! வெடிக்கும் போராட்டங்கள்!
தற்போது நாடு முழுவதும் அதிக கவனம் பெற்றுள்ள விவகாரமாக பொது சிவில் சட்டம் உள்ளது. இது குறித்து இப்பதிவில் அறிந்து கொள்வோம்.
பொது சிவில் சட்டம்:
மத்திய அரசு நாடு முழுவதும் ஒரே மாதிரியான சட்டத்தை அமல்படுத்துவதற்கு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதாவது, தற்போது மக்கள் தங்கள் இனம் மற்றும் மதம் சார்ந்த தனிநபர் சட்டத்தை பின்பற்றுகின்றனர். இதனால் பிரிவினை ஏற்படுவதாக அரசு கருதுகிறது. இதனால் அனைத்து வித மக்களுக்கும் ஒரே “பொது சிவில் சட்டத்தை” பின்பற்றினால் தான் நல்லது என்று தெரிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த கருத்துக்கு நாட்டில் உள்ள மற்ற கட்சிகளில் சில ஏற்றுக் கொள்வதாகவும், பெரும்பான்மையான கட்சிகள் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் நிலைமை இருந்து வருகிறது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு ரூ.20 லட்சம் வரை மருத்துவ காப்பீடு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
நாட்டின் பிரதமர் மோடி அவர்கள் நாட்டின் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது அவசியம் என்று தெரிவித்துள்ளார். இந்த பொது சிவில் சட்டம் அமலுக்கு வரும் பட்சத்தில் நாட்டின் அனைத்து மக்களுக்கும் திருமணம், விவாகரத்து, சொத்துப் பகிா்வு, பழக்கவழக்கம், தத்தெடுக்கும் உரிமை, ஜீவனாம்சம் உள்ளிட்ட அனைத்து விஷயங்களிலும் ஒரே மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் மக்கள் தொடர்ந்து இதற்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.