10 & 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைமுறைகளில் மாற்றம் வேண்டும் – கல்வியாளர்கள் கருத்து!!

0
10 & 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைமுறைகளில் மாற்றம் வேண்டும் - கல்வியாளர்கள் கருத்து!!
10 & 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைமுறைகளில் மாற்றம் வேண்டும் - கல்வியாளர்கள் கருத்து!!
10 & 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைமுறைகளில் மாற்றம் வேண்டும் – கல்வியாளர்கள் கருத்து!!

தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் நலனுக்காக அரசு சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் மாற்றங்கள் சில செய்யலாம் என பள்ளிக்கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பொதுத்தேர்வு நடவடிக்கைகள்:

தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் கடந்த 19 ஆம் தேதி முதல் திறக்கப்பட்டன. இந்நிலையில் பள்ளிகளில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்க தமிழக அரசு பாடத்திட்டத்தில் 35% குறைப்பு, வினா வங்கி தயாரிப்பு, தேர்வு முறைகளில் மாற்றம் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்த நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கது எனவும் ஆனால் இந்த நடவடிக்கைகளில் சில மாற்றங்களை செய்யலாம் எனவும் சில கல்வியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தமிழகத்தில் 9, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க பரிசீலனை – அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!!

ப்ளூ பிரிண்ட் கட்டாயம்:

10 & 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பாடத்திட்டத்தில் 35% பாடங்கள் குறைப்பாகதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாடத்திட்டங்கள் குறைத்த பின் எந்தந்த பாடங்களில் எவ்வளவு மதிப்பெண் கேள்விகள் கேட்கப்படும் என குறிப்பு அடங்கிய ப்ளூ பிரிண்ட் கட்டாயம் வெளியிடப்பட வேண்டும். மாணவர்கள் பள்ளிக்கு வராதபோது எந்தெந்த பகுதிகளில் பாடங்கள் வருகிறது என்பது தெரிந்தால் ஆன்லைன் பாடங்கள் நடத்துவது சுலபமாக இருக்கும் என தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில செயலாளர் பிரபாகரன் தெரிவித்துள்ளனர்.

மாணவர்களின் கற்றல் திறனறிதல் தேர்வு ஒத்திவைப்பு – பள்ளிகள் விளக்கம்!!

இன்டெர்னல் முறை தேர்வுகள்:

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு 25 மதிப்பெண்களும், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 30 மதிப்பெண்களுக்கு செய்முறை தேர்வுகள் நடத்தப்படும். செய்முறை அல்லாத தேர்வுகளுக்கு இன்டெர்னல் தேர்வுகள் கல்லூரிகள் மாதிரி நடத்தப்பட வேண்டும். இதன்மூலம் கல்வியில் பின் தங்கிய மாணவர்கள் கூட தேர்ச்சி பெற வாய்ப்புகள் உள்ளது என தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தணிக்கையாளர் அருளானந்தம் தெரிவித்துள்ளார்.

இறுதியாண்டு தேர்வுகள் மே மாதம் நடத்தப்பட்டதாக சான்றிதழ் – அண்ணா பல்கலை மாணவர்கள் குழப்பம்!!

மீண்டும் பாடத்திட்டங்களில் குறைப்பு:

10 மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படாததால் மாணவர்களின் நலன் கருதி 35% பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளது. இன்னும் சில மாணவர்கள் பள்ளிக்கு வாராத காரணத்தாலும், பள்ளிகளில் நாட்கள் குறைவாக உள்ள காரணத்தாலும் பாடத்திட்டங்களில் 50% குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் சங்க மாநில தலைவர் பீட்டர் ராஜா தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!