இறுதியாண்டு தேர்வுகள் மே மாதம் நடத்தப்பட்டதாக சான்றிதழ் – அண்ணா பல்கலை மாணவர்கள் குழப்பம்!!

0
இறுதியாண்டு தேர்வுகள் மே மாதம் நடத்தப்பட்டதாக சான்றிதழ் - அண்ணா பல்கலை மாணவர்கள் குழப்பம்!!
இறுதியாண்டு தேர்வுகள் மே மாதம் நடத்தப்பட்டதாக சான்றிதழ் - அண்ணா பல்கலை மாணவர்கள் குழப்பம்!!
இறுதியாண்டு தேர்வுகள் மே மாதம் நடத்தப்பட்டதாக சான்றிதழ் – அண்ணா பல்கலை மாணவர்கள் குழப்பம்!!

அண்ணா பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்களுக்கு இறுதித்தேர்வு மார்ச் மாதம் பொது முடக்கம் காரணமாக செப்டம்பர் மாதம் ஆன்லைன் மூலமாக நடைபெற்றது. ஆனால் இதற்கான சான்றிதழில் மே மாதம் தேர்வு எழுதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.

அண்ணா பல்கலைக்கழக அறிவிப்பு:

தமிழகத்தில் கொரோனா காரணமாக மார்ச் மாதம் முதல் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. மேலும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. இதன் காரணமாக பள்ளி & கல்லூரி மாணவர்களுக்கான தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன.

தமிழக பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு – மீண்டும் மூடப்படும் பள்ளிகள்??

இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் செப்டம்பர் மாதம் ஆன்லைன் மூலமாக தேர்வுகள் நடத்தப்பட்டன. தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட தேர்ச்சி சான்றிதழில் மே மாதம் தேர்வுகள் நடத்தப்பட்டதாக குறிப்பிட்டது குறித்து மாணவர்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.

பெற்றோர்கள் புகார்:

இது குறித்து ஒரு மாணவரின் பெற்றோர் கூறுகையில், “அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் என் மகன் படித்தான். அவன் இறுதியாண்டு தேர்வை செப்டம்பர் மாதம் ஆன்லைன் மூலமாக எழுதினான். ஆனால் அவனுக்கு வழங்கப்பட்ட சான்றிதழில் மே மாதம் தேர்வுகள் நடத்தப்பட்டதாக குறிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஜப்பானில் உள்ள நிறுவனம் ஒன்றில் என் மகன் வேலைக்காக பதிவு செய்த போது, அவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பின் போது மே மாதம் உலகமே பொதுமுடக்கத்தில் இருந்த போது நீங்கள் மட்டும் எவ்வாறு தேர்வு எழுதினீர்கள் என்று கேள்வி எழுப்பினர். இதுகுறித்து பல்கலைக்கழகத்தில் புகார் தெரிவித்தோம். அவர்கள் எந்த பதிலும் வழங்கவில்லை. எனவே, சான்றிதழ் முரண்பாடு குறித்து ஏஐசிடிஇயிடம் புகார் கொடுக்க உள்ளேன்”, இவ்வாறு அவர் கூறினார்.

பொறியியல் மாணவர்களுக்கு மாதிரி பயிற்சி தேர்வுகள் – அண்ணா பல்கலை திட்டம்!!

இந்த புகார் குறித்து அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் எம்.வெங்கடேசன் கூறியதாவது, “அண்ணா பல்கலையில் பொறியியல் பயிலும் மாணவர்கள் 4 ஆண்டுகள் படிப்பை முடித்து மே மாதம் தேர்வு எழுதியதாக தான் சான்றிதழ் வழங்க வேண்டும் என்பது பல்கலைக்கழக விதி ஆகும். இதனால் மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. இதுகுறித்து எதாவது புகார் இருந்தால் பல்கலைக்கழகத்தை தொடர்பு கொள்ளலாம்”, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!