பொறியியல் மாணவர்களுக்கு மாதிரி பயிற்சி தேர்வுகள் – அண்ணா பல்கலை திட்டம்!!
தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் பிப்ரவரி மாதம் ஆன்லைன் முறையில் செமஸ்டர் தேர்வுகளை நடத்த உள்ளது. இதற்கிடையில் மாணவர்களுக்கு மாதிரி பயிற்சி தேர்வுகளை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஆன்லைன் தேர்வு:
பொறியியல் செமஸ்டர் தேர்வானது செயற்கை நுண்ணறிவு (AI) ஆல் கண்காணிக்கப்படும். மேலும் ஆன்லைன் தேர்வை அண்ணா பல்கலை நடத்துவது இது இரண்டாவது முறையாகும். கடந்த முறை தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக பலரும் அவதிப்பட்டனர். இம்முறை வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மாணவர்களுக்கு மாதிரி தேர்வுகளை நடத்த உள்ளது அண்ணா பல்கலைக்கழகம்.
வேலை இல்லாதோருக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கும் திட்டம் – சென்னை ஆட்சியர் அறிவிப்பு!!
இந்த தேர்வுகள் பிப்ரவரி 1 ஆம் தேதி தொடங்கும். தொலைதூர கல்வி மாணவர்களுக்கான பயிற்சி மாதிரி தேர்வு தேதிகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை, மேலும் இந்த மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வுகள் பிப்ரவரி 13 ஆம் தேதி தொடங்கும் என்று பல்கலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பல தேர்வு கேள்வி (MCQ) வடிவத்தில் வினாத்தாள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 60 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும், இது பின்னர் 100 மதிப்பெண்களாக மாற்றப்படும். மாதிரி மற்றும் இறுதித் தேர்வு ஆகிய இரண்டிற்கும் ஒரே சாதனத்தைப் பயன்படுத்தவும், தேர்வு தொடங்குவதற்கு முன்பு அவர்களின் Search History யை அழிக்கவும் மாணவர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
10 & 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ப்ளூ பிரிண்ட் வெளியீடு – தலைமை ஆசிரியர்கள் கோரிக்கை!!
பொறியியல் மாணவர்களுக்கு முந்தைய செமஸ்டர் தேர்வும் ஆன்லைனில் நடைபெற்றது. முந்தைய செமஸ்டரின் மாதிரி தேர்வின் போது பல மாணவர்கள் தொழில்நுட்ப சிக்கல்களைப் பற்றி புகாரளித்ததால், பல்கலைக்கழகம் சார்பில் தகுந்த முன்னேற்பாடுகள் செய்யப்பட்டது. இதனால் 90 சதவீத மாணவர்கள் எந்தவொரு சிரமமும் இல்லாமல் தேர்வை எழுதி முடித்தனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்