10 & 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ப்ளூ பிரிண்ட் வெளியீடு – தலைமை ஆசிரியர்கள் கோரிக்கை!!
மதுரை மாவட்ட தலைமை ஆசிரியர் செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தலைமை ஆசிரியர் கூட்டம்:
தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வகுப்புகள் தொடங்கப்பட்டன. இந்நிலையில் பொதுத்தேர்வு நெருங்கி வருவதால் ஆசிரியர்கள் பாடங்களை விரைவில் நடத்தி முடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அரசும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பாடத்திட்டங்களில் குறைப்பு அறிவித்துள்ளது.
2020ஆம் ஆண்டு 22.5 கோடி பேர் வேலையிழப்பு – சர்வதேச தொழிலாளர் அமைப்பு ஆய்வு!!
மேலும் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் பட்டியலும் தயாரிக்க அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் நேற்று மதுரையில் நடைபெற்ற தலைமை ஆசிரியர்கள் செயற்குழு கூட்டத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ப்ளூ பிரிண்ட் விரைவில் வெளியிட வேண்டும். டிஇஒ நியமனங்கள் அனைத்தையும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும். மாணவர்களிடமிருந்து பெற்றோர்- ஆசிரியர் கழகத்துக்கான நிதியை வசூல் செய்ய முடியாத நிலையில் அந்த நிதியை அரசு வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 10,000 காலிப்பணியிடங்கள் – அமைச்சர் தங்கமணி அறிவிப்பு!!
இந்த கூட்டம் மாநிலத் தலைவர் எம்.பொன்முடி தலைமையில் நடத்தப்பட்டது. மாநிலச் செயலாளர் ஏ.ரமேஷ் முன்னிலை வகித்தார். மாநில பொருளாளர் சண்முகநாதன், சட்ட செயலாளர் கே.அனந்தராமன், மாவட்ட தலைவர் கந்தசாமி, மாவட்ட செயலாளர் கார்மேகம், மாவட்ட பொருளாளர் ரமேஷ், மாநில துணைத்தலைவர் நாகசுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசித்தனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்