வேலை இல்லாதோருக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கும் திட்டம் – சென்னை ஆட்சியர் அறிவிப்பு!!

0
வேலை இல்லாதோருக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கும் திட்டம் - சென்னை ஆட்சியர் அறிவிப்பு!!
வேலை இல்லாதோருக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கும் திட்டம் - சென்னை ஆட்சியர் அறிவிப்பு!!
வேலை இல்லாதோருக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கும் திட்டம் – சென்னை ஆட்சியர் அறிவிப்பு!!

தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்பற்றோர்க்கு, அரசு சார்பில் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான உதவித்தொகை பெற விருப்பமுள்ளவர்கள் சென்னை கிண்டியில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பற்றோர்க்கான உதவித்தொகை:

தமிழகத்தில் கொரோனா தாக்கம் காரணமாக பலர் வேலையிழந்துள்ளனர். இந்நிலையில் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் தமிழக அரசு சார்பில் வேலைவாய்ப்பற்றோர்க்கான உதவித்தொகை ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது.

அரசு பள்ளிகளில் மாணவர்கள் வருகை 60% குறைவு – ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் அறிக்கை!!

எவ்வளவு உதவித்தொகை? யாருக்கெல்லாம் வழங்கப்படுகிறது?

இந்த திட்டத்தின் கீழ் மாதந்தோறும் 10 ஆம் வகுப்பிற்கு கீழ் பயின்றவர்களுக்கு ரூ.200 உதவித்தொகையும், 10 ஆம் வகுப்பு பயின்றவர்களுக்கு ரூ.300 உதவித்தொகையும், 12 ஆம் வகுப்பு பயின்றவர்களுக்கு ரூ.400 உதவித்தொகையும், பட்டதாரிகளுக்கு ரூ.600 வழங்கப்படுகிறது. மேலும் மாற்றுத்திறனாளிகள் 10 ஆம் வகுப்பிற்கு கீழ் பயின்றவர்களுக்கு ரூ.600 உதவித்தொகையும், 12 ஆம் வகுப்பு பயின்றவர்களுக்கும் ரூ.750 உதவித்தொகையும், பட்டதாரிகளுக்கு ரூ.1000 உதவித்தொகையும் வழங்கப்படுகிறது.

உதவித்தொகை பெற தகுதி உள்ளவர்கள்:

இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிப்பவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 5 ஆண்டுகளாக பதிவு செய்திருக்க வேண்டும். மேலும் அதனை புதுப்பிக்க வேண்டும். இந்த ஆண்டிற்கு தகுதி உள்ளவர்கள் https://tnvelaivaaippu.gov.in/ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த திட்டத்திற்கு விண்ணப்பித்த SC/ST பிரிவினர்கள் 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி வரை 40 வயதிற்கு மிகாமலும், மற்ற பிரிவினர் 45 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

10 & 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ப்ளூ பிரிண்ட் வெளியீடு – தலைமை ஆசிரியர்கள் கோரிக்கை!!

பொறியியல், மருத்துவம், விவசாயம், கால்நடை அறிவியல் உள்ளிட்ட தொழில்நுட்ப பாடங்களில் பட்டம் பெற்றவர்கள் இந்த உதவித்தொகையை பெற முடியாது. இந்த உதவித்தொகை பெற முதன்முதலாக விண்ணப்பித்தவர்கள் இணையதளம் மூலமாக விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து அதில் வங்கி கணக்கு புத்தக நகலை இணைத்தது சென்னை கிண்டியில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!