4 காவல் ஆய்வாளர்களுக்கு ‘காந்தியடிகள் காவல் பதக்கம்’ – தமிழக முதலவர் வழங்கல்!!

0
4 காவல் ஆய்வாளர்களுக்கு 'காந்தியடிகள் காவல் பதக்கம்' - தமிழக முதலவர் வழங்கல்!!
4 காவல் ஆய்வாளர்களுக்கு 'காந்தியடிகள் காவல் பதக்கம்' - தமிழக முதலவர் வழங்கல்!!
4 காவல் ஆய்வாளர்களுக்கு ‘காந்தியடிகள் காவல் பதக்கம்’ – தமிழக முதலவர் வழங்கல்!!

இந்திய குடியரசு தினவிழாவை முன்னிட்டு தமிழக காவல்துறையில் சிறப்பாக செயல்பட்ட பெண் காவல் ஆய்வாளர் உட்பட 4 காவல் ஆய்வாளர்களுக்கு காந்தியடிகள் காவலர் பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.

காந்தியடிகள் காவல் பதக்கம்:

இந்த ஆண்டு 72வது குடியரசு தினவிழா இன்று காலை சென்னை மெரினா கடற்கரையில் கொரோனா கட்டுப்பாடுகளுடன் நடத்தப்பட்டது. இந்த ஆண்டு காவல்துறையில் 3 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் காவல் பதக்கம் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது கள்ளச்சாராயம் வழக்கில் சிறப்பாக செயலாற்றிய பெண் ஆய்வாளர் உட்பட 4 காவல் அதிகாரிகளுக்கு காந்தியடிகள் காவல் பதக்கம் முதல்வர் கையால் வழங்கப்பட்டுள்ளது.

வேலை இல்லாதோருக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கும் திட்டம் – சென்னை ஆட்சியர் அறிவிப்பு!!

காந்தியடிகள் காவல் பதக்கம் வழங்கப்பட்ட காவல் ஆய்வாளர்கள் விவரங்கள் பின்வருமாறு, புனித தோமையர்மலை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் பணிபுரிந்து வரும் பெண் காவல் ஆய்வாளர் மகுடீஸ்வரி, மத்திய புலனாய்வுப் பிரிவு சேலம் மண்டலத்தில் பணிபுரிந்து வரும் காவல் ஆய்வாளர் செல்வராஜூ அவருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

அரசு பள்ளிகளில் மாணவர்கள் வருகை 60% குறைவு – ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் அறிக்கை!!

மேலும் விருதுநகர் மாவட்டம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் முகாம் எழுத்தராகப் பணிபுரிந்து வரும் சண்முகநாதன், வேலூர் மண்டலத்தில் மத்திய புலனாய்வுப் பிரிவில் பணியாற்றி வரும் காவல் ஆய்வாளர் ராஜசேகரன் அவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!