மாணவர்களின் கற்றல் திறனறிதல் தேர்வு ஒத்திவைப்பு – பள்ளிகள் விளக்கம்!!
தமிழக்தில் 10 மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டதால் மாணவர்களின் கற்றல் திறனை அறிய ஆன்லைன் மூலமாக தேர்வுகள் நடத்த தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. இதன்படி இன்று நடைபெற்ற கற்றல் திறனறிதல் தேர்வில் சர்வர் சரியில்லாத காரணத்தால் மாணவர்கள் பலர் தேர்வில் கலந்து முடியாமல் போனதால் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டது.
கற்றல் திறனறிதல் தேர்வு:
தமிழகத்தில் கொரோனா காரணமாக அனைத்து பள்ளிகளும் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டன. 10 மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்த அரசு அனுமதி வழங்கியது. இந்நிலையில் தற்போது பொதுத்தேர்வு நெருங்கி வருவதால் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் தொடங்கப்பட்டன.
கௌரவ விரிவுரையாளர்களுக்கு ரூ.15,000 தொகுப்பூதியம் வழங்கல் – அரசாணை வெளியீடு!!
மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். ஒருபுறம் மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதில் ஒரு அங்கமாக 10 மாதங்களாக ஆன்லைன் மூலமாக படித்து வரும் மாணவர்கள் கற்றல் திறனை அறிந்து அவர்களுக்கு பாடங்களை நடத்த அரசு உத்தரவிட்டது. அதற்கான தேர்வுகள் ஜனவரி 22 ஆம் தேதி முதல் 4 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டது.
12 ஆம் வகுப்பு மாணவர்களின் பாடத்திட்டத்தின் முதன்மையான பாடங்களில் இருந்து தலா 4 பாடங்கள் தேர்வு செய்து ஒரு பாடத்திற்கு 30 மதிப்பெண் என 120 மதிப்பெண்ணுக்கு தேர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான தேர்வுகள் பள்ளிகளில் உள்ள உயர்தொழில்நுட்ப ஆய்வகங்களில் நடத்த உத்தரவிடப்பட்டிருந்தது.
தமிழகத்தில் 10 & 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் – நாமினல் எண் தயாரிப்பு துவக்கம்!!
ஆனால் சர்வர் சரியில்லாத காரணத்தால் பல பள்ளிகளில் அனைத்து மாணவர்களும் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் எனவே சர்வர் பிரச்னை சரிசெய்யப்பட்டு மறு உத்தரவு வரும் வரை இந்த தேர்வுகளை ஒத்திவைக்க அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்