தமிழகத்தில் 10 & 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் – நாமினல் எண் தயாரிப்பு துவக்கம்!!
தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நாமினல் எண் தயாரிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள்:
கொரோனா காரணமாக தமிழகத்தில் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டன. இந்நிலையில் பொதுத்தேர்வு நெருங்கி வருவதால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் 19 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டன.
பிப்ரவரி 28ம் தேதி முனைவர் பட்ட படிப்பிற்கான நுழைவுத்தேர்வு – தமிழ் பல்கலை அறிவிப்பு!!
இந்நிலையில் பொதுத்தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்களுக்கு சுமையை குறைக்க பாடத்திட்டங்களில் குறைப்பு, வினா வங்கி தயாரித்தல், ஆன்லைன் தேர்வுகள் நடத்தப்படுத்தல் போன்ற நடவடிக்கைகளை பள்ளிக்கல்வித்துறை எடுத்துள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 முதல் 4ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு – மாநில அரசு விளக்கம்!!
இந்நிலையில் அரசு தேர்வுகள் இயக்கம் சார்பில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் பட்டியலை 11 ஆம் வகுப்பு தேர்வு பட்டியலை அடிப்படையாக கொண்டு தயாரிக்கும் பணியை இன்று முதல் தொடங்க உத்தரவிட்டுள்ளது. மேலும் தற்போது பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நாமினல் எண் வழங்க பணி தொடங்கப்பட்டுள்ளன என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்