அரசு மருத்துவர்களுக்கு சம்பள உயர்வு – மார்ச் 29 ம் தேதி போராட்டம்! மாநில தலைவர் அறிவிப்பு!
தமிழக அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் தங்களுக்கு சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனை வலியுறுத்தி மருத்துவர்கள் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
போராட்டம்:
தமிழக அரசு ஊழியர்கள் அகவிலைப்படி மற்றும் ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று அரசிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். அவர்களை தொடர்ந்து அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களும் தங்களுக்கு ஊதிய உயர்வை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தமிழக பள்ளிகளுக்கு முக்கிய அறிவிப்பு – மாணவர்களின் பாதுகாப்பு குறித்து நீதிமன்றம் புதிய உத்தரவு!
இதனை வலியுறுத்தி தமிழக அரசு மருத்துவர் சங்கம் சார்பில் எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் மருத்துவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தின் போது சம்பள உயர்வு வழங்குவதற்கான அரசாணை விடுவித்து உடனடியாக கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர்.
Follow our Instagram for more Latest Updates
மேலும் தமிழக முதல்வரின் விரிவான காப்பீடு திட்டத்தில் அறுவை சிகிச்சைக்கு வைக்கப்பட்டுள்ள இலக்கை மாற்றியமைக்க வேண்டும் என்றும் கூறினார். இதில் பங்கேற்று பேசிய மருத்துவர்கள் சங்க மாநில தலைவர் மருத்துவர்களுக்கான சம்பள உயர்வு அரசாணை உடனடியாக அமல்படுத்த வேண்டும். இல்லையெனில் வரும் 29ம் தேதி புறநோயாளிகள் புறக்கணிக்கும் போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
Exams Daily Mobile App Download