தமிழக பள்ளிகளுக்கு முக்கிய அறிவிப்பு – மாணவர்களின் பாதுகாப்பு குறித்து நீதிமன்றம் புதிய உத்தரவு!
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி சுற்றுலா அழைத்து செல்லும் மாணவர்களின் பாதுகாப்பிற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கல்வி நிறுவனங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு கல்வி மட்டுமில்லாமல் விளையாட்டு, சுற்றுலா உள்ளிட்ட மற்ற துறைகளிலும் சிறந்து விளங்க பயிற்சி வழங்கப்படுகிறது. அந்த வகையில் கல்வி சுற்றுலா அழைத்து செல்லும் போது மாணவர்களின் பாதுகாப்பு கேள்வி குறியாக இருக்கிறது. இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
தமிழக அரசின் எண்ணும் எழுத்தும் திட்டம் – ஆசிரியர்களுக்கு பயிற்சி.. வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
அதில் காஞ்சிபுரம் தனியார் பொறியியல் கல்லூரி சார்பில் கடற்கரை தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது கடற்கரை தூய்மைப்படுத்தும் போது கடல் அலையில் சிக்கி மாணவர் மதனகோபால் உ யிரிழந்தார். மாணவர் மதனகோபால் உயிரிழந்தார். இந்த விவகாரத்தில் ரூ.25 லட்சம் இழப்பீடு கோரி தாய் சர்மிளா, சகோதரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில் கல்வி சுற்றுலா செல்லும் மாணவர்களின் பாதுகாப்புக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கல்வி நிறுவனங்கள் எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Exams Daily Mobile App Download