9, 10 மற்றும் 11ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கல்வித்துறை வெளியீடு!!
பள்ளிகளுக்கு விடுமுறை:
தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வந்த காரணத்தால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களை தவிர மற்ற வகுப்பினர் அனைவரையும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவித்தனர். 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் கண்டிப்பாக பொதுத்தேர்வு நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு – பள்ளிக்கல்வித்துறை வெளியீடு!!
பாடங்கள்:
நடப்பு கல்வி ஆண்டில் கொரோனா தொற்றின் முதல் அலை பரவல் காரணமாக பள்ளிகள் வழக்கம் போல் செயல்படவில்லை. இதனால் மாணவர்களுக்கு பாடங்கள் அனைத்தும் ஆன்லைன் முறையில் நடத்தப்பட்டது. மேலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடங்கள் கல்வி தொலைக்காட்சி மூலம் கற்பிக்க அறிவுறுத்தப்பட்டது. இதனால் ஜூலை 15ம் தேதி முதல் பாடங்கள் கல்வி தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்பப்பட்டது. இந்நிலையில் கொரோனாவின் தாக்கம் குறைந்த காரணத்தால் ஜனவரி மாதம் முதல் பள்ளிகள் செயல்பட தொடங்கியது.
கல்வி தொலைக்காட்சி:
தற்போது மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டாலும் பாடங்கள் முழுவதுமாக நடத்தி முடிக்கப்படவில்லை. இந்நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் 9, 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடங்களை கல்வி தொலைக்காட்சி மூலம் மற்றும் இணையவழியில் நடத்த ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்