அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் – ஏப்ரல் 15 முதல் தொடக்கம்!!

0
அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் - ஏப்ரல் 15 முதல் தொடக்கம்!!
அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் - ஏப்ரல் 15 முதல் தொடக்கம்!!
அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் – ஏப்ரல் 15 முதல் தொடக்கம்!!

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் ஆன்லைன் மூலமாக நடத்தப்படும் செமஸ்டர் தேர்வுகள் ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

செமஸ்டர் தேர்வுகள்:

தமிழகத்தில் உள்ள கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கல்லூரிகள் மூடப்பட்டன. இந்நிலையில் மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்படாமல் தேர்ச்சி வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னர் கொரோனா தாக்கம் குறைந்து வந்த காரணத்தினால் இறுதியாண்டு மாணவர்களுக்கு டிசம்பர் மாதம் 6 ஆம் தேதியும், மற்ற மாணவர்களுக்கு பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதியும் திறக்கப்பட்டன.

TN Job “FB  Group” Join Now

இந்நிலையில் மீண்டும் கொரோனா தாக்கம் காரணமாக இறுதியாண்டு மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடைபெறும் எனவும் மற்ற மாணவர்களுக்கு கல்லூரிகள் ஆன்லைன் மூலமாக மட்டுமே வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ளது. அரசு தரப்பில் மார்ச் 31 ஆம் தேதிக்குள் அனைத்து செய்முறை தேர்வுகளையும் நடத்தி முடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு – பள்ளிக்கல்வித்துறை வெளியீடு!!

இந்நிலையில் மற்ற மாணவர்களுக்கு ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மார்ச் 31 ஆம் தேதிக்கு பின் செய்முறை தேர்வுகள் நடத்தி முடிக்க முடியாத கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகத்திடம் முன் அனுமதி பெற்று மீண்டும் தேர்வுகளை நடத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!