தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு – பள்ளிக்கல்வித்துறை வெளியீடு!!
தமிழகத்தில் கொரோனா தாக்கம் அதிகமாக பரவி வருவதால் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், பள்ளிக்கல்வித்துறைக்கு அறிவித்துள்ளது.
கொரோனா கட்டுப்பாடு நெறிமுறைகள்:
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மூடப்பட்டன. 10 மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டன. இந்நிலையில் கொரோனா தாக்கம் குறைந்து வந்ததால் 10,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் ஜனவரி மாதமும், 9,11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் பிப்ரவரி மாதமும் திறக்கப்பட்டன.
TN Job “FB Group” Join Now
பள்ளிகள் கால தாமதமாக திறந்த காரணத்தினால் 9,10,11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடத்திட்டங்களை முடிக்க முடியாத காரணத்தினால் அவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்படாமல் தேர்ச்சி வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மட்டும் மே மாதம் 3 ஆம் தேதி நடைபெற உள்ளது. 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடத்திட்டங்களை விரைந்து முடிக்க வேண்டும் என்பதற்காக பள்ளிகள் வாரத்தில் 6 நாட்களும் நடைபெற்றன.
தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச நீட் தேர்வு பயிற்சி – பள்ளிக் கல்வித்துறை தகவல்!!
இந்நிலையில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக பல மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். அதனால் 9,10,11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டது. 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தற்போது வகுப்புகள் நடைபெற்று வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் 2000 மேல் கொரோனா பரவல் பதிவாகி வருவதால் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், பள்ளிக்கல்வித்துறைக்கு அனுப்பியுள்ளது.
வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை – மத்திய அமைச்சர் விளக்கம்!!
அதில் மாணவர்கள் வகுப்பறையில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். ஒவ்வொரு மாணவருக்கும் குறிப்பிட்ட இடைவெளி வழங்கப்பட வேண்டும். குறிப்பிட்ட நேர இடைவெளியில் மாணவர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட வேண்டும். மாணவர்கள் மதிய உணவு இடைவெளியில் ஒன்றாக அமர்ந்து சாப்பிட கூடாது. வகுப்பறை, ஜன்னல், மேஜை போன்றவற்றை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். வகுப்பறையில் கொரோனா வாசகம் கொண்ட பதாகைகள் ஓட்டப்பட வேண்டும்.