தமிழக அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு முக்கிய உத்தரவு – கல்வித்துறை வெளியீடு!!
அரசு திட்டங்கள்:
தமிழக அரசு, அரசு பள்ளிகள் மற்றும் மாணவர்களின் நலனிற்காக பல சிறப்பு திட்டங்களை அறிவித்தும், செயல்படுத்தியும் வருகிறது. அந்த வகையில், அரசு பள்ளிகளின் தரம் உயர்த்தப்படுவதற்காக அரசு பள்ளிகளின் பட்டியல் சேகரிக்கப்பட உள்ளது. மேலும், தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளிலும் ஆன்லைன் வகுப்புகள் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அரசு இலவச டேப்லெட் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் எதிரொலி – ஊரடங்கை அமல்படுத்தியுள்ள மாநிலங்களின் பட்டியல்!!
குறு வள மையங்கள்:
தமிழகம் முழுவதும் பொதுவாக சிறந்த மற்றும் அனைத்து வசதிகளும் உள்ள மேல்நிலை பள்ளிகளின் கீழ் அதிகபட்சமாக 15 தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகள் சேர்ந்து குறு வள மையமாக உருவாக்கப்படும். அதன் கீழே செயல்படும் பள்ளிகள் அனைத்திற்கும் அந்த குறு வள பள்ளியின் தலைமை ஆசிரியர் அவர்களே பொறுப்பு அலுவலராக செயப்படுவார்கள். குறு வள பள்ளியில் உள்ள மேம்பட்ட வசதிகளை மற்ற பள்ளிகள் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது.
பள்ளிகளின் வளர்ச்சி:
கோவை மாவட்டடத்தில் மட்டும் மொத்தம் 84 குறு வள மையங்கள் உள்ளது. குறு வள மைய பள்ளியின் தலைமை ஆசிரியர் தலைமையில் மற்ற பள்ளிகளுக்கு தேவையான வசதிகள் மற்றும் மேம்பாடு பற்றிய அறிக்கையை பள்ளிகள் தயாரிக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அறிக்கை தொடர்பாக தனியாக வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி தயாரிக்கப்பட்டு உள்ள பள்ளிகளின் வளர்ச்சி திட்டத்தை பள்ளிக்கல்வி இயக்குநரகத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்