தமிழகத்தில் +2 பொதுத்தேர்வு தேதிகள் மாற்றம்? விரைவில் அறிவிப்பு!
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக +2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதிகளை மாற்ற பள்ளிக் கல்வித்துறை முடிவெடுத்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.
+2 தேர்வுகள் தள்ளி வைப்பு:
தமிழகத்தில் கொரோனா பரவலின் வேகம் தினசரி அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் புதிதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று ஒருநாள் மட்டும் தமிழகத்தில் 6,698 பேருக்கு புதிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் பல தடுப்பு நடவடிக்கைகளுடன் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தாலும் கொரோனா தொற்றின் வேகம் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இதனால் தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் போன்ற கல்வி நிறுவனங்களும் பெரும்பாலும் பாதிப்படைந்துள்ளது.
TN Job “FB Group” Join Now
கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக பள்ளிகளில் மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்த முடியாத சூழல் காணப்பட்டது. அதனால் மாணவர்களுக்கும் தேர்வுகள் இல்லாமல் ஆல்பாஸ் முறை அறிவிக்கப்பட்டது. அதே போல தமிழகத்தில் இந்த ஆண்டும் கொரோனா வைரஸ் தீவிரமடைந்து வருகிறது. இதனால் பள்ளி மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் உருவாகாத வகையில் +2 மாணவர்களுக்கு மட்டும் பொதுத்தேர்வுகளை நடத்த மாநில அரசு திட்டமிட்டது. அதன்படி +2 பொதுத்தேர்வுகள் மே மாதம் 3 ஆம் தேதி துவங்கி மே 21 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் – மத்திய அரசு வெளியீடு!!
தற்போது மீண்டுமாக உயர்ந்து வரும் கொரோனா பரவலால் தேர்வுகளை நடத்த முடியாத நிலை உருவாகியுள்ளது. இந்த தேர்வுகளை ஒத்திவைப்பது குறித்து தமிழக முதல்வர் பழனிச்சாமி இன்று ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் +2 மாணவர்களுக்கு மே 3 ஆம் தேதியில் இல்லாமல் வேறு தேதிகளில் தேர்வுகளை நடத்தலாம் என பள்ளிக் கல்வித்துறை முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் பெறப்பட்டுள்ளது. மாற்றப்பட்ட தேர்வு தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.