தமிழக காவல் துறையினருக்கு விடுமுறை ரத்து – டி.ஜி.பி., அறிக்கை!!
சட்டமன்ற தேர்தல்:
சட்டமன்ற தேர்தல் 5 வருடஙகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. 2021ம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 6ம் தேதி நடக்க இருக்கிறது. இதற்கான முன்னேற்பாடுகளை மாநில தலைமை தேர்தல் அதிகாரி செயல்படுத்துவார். மேலும், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு தலைமை தேர்தல் அதிகாரி நியமிக்கப்படுவார்கள். தேர்தல் வாக்குச்சாவடி பணிகளில் அரசு பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்.
தமிழகத்தில் விடுமுறை நாட்களிலும் இலவச நீட் பயிற்சி – ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்!!
பாதுகாப்பு பணி:
தேர்தலின் போதும், முன்னேற்பாடு பணிகளின் போதும், வாக்குச்சாவடி பாதுகாப்பிற்காகவும், தமிழக காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் நியமிக்கப்படுவார்கள். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள இந்த நிலையில் தமிழக காவல் துறையினருக்கான அறிவிப்புகளை தமிழக போலீஸ் அதிகாரி டி.ஜி.பி திரிபாரதி வெளியிட்டுள்ளார்.
அமைதியான முறையில் தேர்தல் பணிகள் நடந்து முடிக்கும் வகையில் பாதுகாப்பு பணிகளை டி.ஜி.பி திரிபாரதி முடுக்கிவிட்டுள்ளார். இதனால் தமிழக தேர்தல் நடந்து முடியும் வரையில் தமிழக காவல் துறையினருக்கு விடுமுறை கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான சுற்றறிக்கை டி.ஜி.பி அலுவலகத்தில் இருந்து அனைத்து மாவட்ட போலீஸ் உயர் அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், மிகவும் தவிர்க்க முடியாத காரணத்துக்காக மட்டுமே விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்