தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கலெக்டர் வெளியிட்ட முக்கிய தகவல் – இதை கட்டாயம் செய்யுங்கள்!!

0
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கலெக்டர் வெளியிட்ட முக்கிய தகவல் - இதை கட்டாயம் செய்யுங்கள்!!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கலெக்டர் வெளியிட்ட முக்கிய தகவல் - இதை கட்டாயம் செய்யுங்கள்!!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையானது நாளை வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது.  இப்பண்டிகை தினத்தை முன்னிட்டு வியாபாரிகள் இனிப்பு மற்றும் கார வகைகளை சுத்தமானதாகவும் தரமானதாகவும் விற்பனை செய்ய வேண்டும் என செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தீபாவளி

தமிழகத்தில் தீபாவளி பண்டிகை தினத்தன்று மக்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் இனிப்புகளை பரிமாறி கொண்டு தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். மேலும் தற்போது தீபாவளி பண்டிகையானது நாளை கொண்டாடப்பட இருப்பதால் இனிப்பு, கார வகைகளை தயாரிப்பாளர்கள் சுகாதாரமான முறையில் தயாரிக்க வேண்டும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Follow our Instagram for more Latest Updates

மேலும் இது தொடர்பாக வெளியான செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு, கார வகைகள் மற்றும் பேக்கரி உணவு பொருட்களை தயாரிப்பவர்கள் கலப்படமான பொருட்களையோ, சட்டத்தில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமான செயற்கை நிறமிகளையோ பயன்படுத்தக்கூடாது என அறிவுறுத்தியுள்ளார்.  ஒருமுறை பயன்படுத்திய எண்ணெய்யை மறுபடியும் உபயோகப்படுத்த வேண்டாம் எனவும் ஈக்கள், பூச்சிகள் மற்றும் கிருமி தொற்று இல்லாத இடத்தில் விற்பனை செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யவுள்ளோர் கவனத்திற்கு – நாளை மையங்கள் செய்யப்படும் நேரம் மாற்றம்!

இதனை தொடர்ந்து விற்பனைக்காக காட்சிப்படுத்தப்படும் இனிப்பு வகைகளை தயாரித்த தேதி மற்றும் உபயோகிக்கும் காலம் ஆகியவற்றை பாக்கெட்டுகளில் அச்சடித்திருக்க வேண்டும்.  இதே போல் திருமண மண்டபங்களில் பெரிய அளவில் இனிப்பு, கார வகைகளை தயாரிக்கும் நிறுவனங்களின் அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களும் உணவு பாதுகாப்பு துறையில் பதிவு செய்து உரிமம் பெறுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!