பிக் பாஸ் நிகழ்ச்சியில் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் ஜிபி முத்து வெளியேறியுள்ளார். இந்நிலையில் அவருக்கு பதிலாக நிகழ்ச்சிக்குள் நுழைய இருக்கும் போட்டியாளர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
பிக் பாஸ்:
கடந்த 9 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கப்பட்ட நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இதன் ஆறாவது சீசன் தற்போது விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் ஜிபி முத்து இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ளார்.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
அவர் தன் குடும்பத்தை பார்க்காமல் இருக்க முடியாது என கூறி வெளியேறியுள்ளார். இந்நிலையில் முத்துவுக்கு பதிலாக பிக் பாஸ் குழு பிரபல நடிகரிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. அதாவது நடிகர் மன்சூர் அலி கானை அழைத்து வர பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.
ஏற்கனவே மன்சூர் அலி கான் பேசும் சில விஷயங்கள் சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை கிளப்புவது வழக்கம். இதில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வேறு அவர் வந்தால் இன்னும் ஆட்டம் சூடு பிடிக்கும். பிக் பாஸ் வீட்டிற்கு வர மன்சூர் அலி கான் ஒப்புக்கொள்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.