கொரோனா தடுப்பு பணியில் முதல்வர் முக ஸ்டாலின் – 5 மாவட்டங்களில் இன்று ஆய்வு!!
தமிழகத்தில் கொரோனா தொற்று நிலவரம், அதன் தடுப்பு பணிகள் மற்றும் சிகிச்சை குறித்து முதல்வர் முக ஸ்டாலின் இன்றும் (மே 20) நாளையும் (மே 21) 2 நாட்கள் ஆய்வுப்பணிகளை மேற்கொள்ளவுள்ளார்.
ஆய்வு பணிகள்:
தமிழகத்தில் கொரோனா 2 ஆம் அலை தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த நோய் பரவலை தடுக்கும் விதத்தில் மாநிலம் முழுவதும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் முதல்வர் முக ஸ்டாலின், தமிழக மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை நிலவரம், மாவட்டங்கள் தோறும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளார்.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர் உயர்வு – வாகன ஓட்டிகள் கவலை!!
அதன் படி கோவை, ஈரோடு, சேலம், மதுரை, திருப்பூர் ஆகிய 5 மாவட்டங்களில் ஆய்வு பணிகளை நடத்த உள்ளார். இந்த மாவட்டங்களில் நடைபெறும் கொரோனா தடுப்பு ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ளும் அவர் சில மாவட்டங்களில் 18 வயது மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகளை துவக்கி வைக்க உள்ளார். முக ஸ்டாலின் மாநில முதல்வராக பொறுப்பேற்ற பிறகு அவர் மேற்கொள்ளும் முதல் சுற்றுப்பயணம் இதுவாகும்.
TN Job “FB Group” Join Now
இது முதல்வர் மேற்கொள்ளும் அரசுமுறை பயணம் என்பதால் திமுக கட்சியினர் தன்னை சந்திக்க வரவேண்டாம் எனவும் முதல்வர் வரும் வழியில் பதாகைகள், கொடி, தோரணங்கள் வைக்கக்கூடாது எனவும் அவர் உத்தரவிட்டுள்ளார். முன்னதாக அமைச்சர்கள் பலர் மாவட்டங்கள் தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கொரோனா பணிகள் குறித்து ஆய்வு செய்து, ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.