தமிழகத்தில் 18+ வயதினருக்கு கொரோனா தடுப்பூசி – முதல்வர் இன்று துவக்கி வைப்பு!
தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளை பார்வையிட முதல்வர் இன்று மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். திருப்பூரில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
தடுப்பூசி திட்டம்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 34 ஆயிரத்திற்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 360க்கு மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். இதனால் தற்போது அமலில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் அனைத்தும் கடுமையாக்கப்பட்டுள்ளன.
கொரோனா தடுப்பு பணியில் முதல்வர் முக ஸ்டாலின் – 5 மாவட்டங்களில் இன்று ஆய்வு!!
இந்நிலையில் தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதல்வர் இன்று 3 மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்வையிட உள்ளார். அதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலமாக புறப்படுகிறார். முதலில் சேலம் சென்று அங்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளை சந்தித்து பேச உள்ளார். அதன் பின்னர் காலை 10 மணி அளவில் சேலம் உருக்காலை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய மருத்துவமனையை பார்வையிடுகிறார்.
அதன் பின்னர் பகல் 12.15 மணி அளவில் கோவை செல்லும் வழியில் திருப்பூரில் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள நேதாஜி ஜவுளி பூங்காவிற்கு செல்கிறார். அங்கு 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்கி வைப்பார். பகல் 1.30 மணிக்கு கோவை சுற்றுலா மாளிகை செல்லவுள்ளார். அங்கு கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்ய உள்ளார்.
TN Job “FB Group” Join Now
அதன் பின்னர் இரவு 7.30 மணி அளவில் கோவையில் இருந்து மதுரை செல்லவுள்ளார். இரவு மதுரை சுற்றுலா மாளிகையில் தங்குகிறார். நாளை காலை 9:45 மணிக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்கிறார். அங்கு ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளார். அதன் பின்னர் தோப்பூர் மருத்துவமனை சென்று ஆய்வு செய்கிறார். அதன் பின்னர் மாலை 5 மணிக்கு திருச்சி செல்கிறார். அங்கு எம்.சி., மருத்துவமனை, என்.ஐ.டி.ஆகியவற்றை ஆய்வு செய்கிறார். அதன்பின்னர் 6.15 மணிக்கு பத்திரிகையாளர்களை சந்திக்க உள்ளார். இரவு 7:30 மணிக்கு சென்னை செல்ல உள்ளார்.