தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தனித்தேர்வர்கள் – நாளை முதல் விண்ணப்பிக்கலாம்!!
12ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத உள்ள தனித்தேர்வர்கள் நாளை (27.2.2021) முதல் விண்ணப்பிக்கலாம் என்று அரசுத்தேர்வுகள் இயக்குனர் சி.உஷாராணி அறிவித்துள்ளார்.
தனித்தேர்வர்கள்:
2021ம் ஆண்டு 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தனித்தேர்வராக விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் கடந்த ஆண்டு 11ம் வகுப்பு தேர்வு எழுதி அதில், தேர்ச்சி பெற்ற மற்றும் தேர்ச்சி பெறாதவர்களும் 12ம் வகுப்பு பொதுத்தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் மாவட்ட வாரியாக உள்ள அரசுத்தேர்வுத்துறை சேவை மையங்களுக்கு நேரில் சென்று தங்களது விண்ணப்பத்தினை இணையதளம் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு வயது உயர்வை திரும்ப பெற வேண்டும் – ஆசிரியர் மன்றம் கோரிக்கை!!
தனித்தேர்வர்கள் நாளை (27.2.2021) முதல் மார்ச் 6ம் தேதி வரை விண்ணப்பத்தை பதிவு செய்ய வேண்டும். இந்த நாட்களில் விண்ணப்பிக்க தவறும் பட்சத்தில் மார்ச் 8 மற்றும் 9 ம் தேதிகளில் சேவை மையத்திற்கு சென்று தேர்வு கட்டணத்துடன் கூடுதலாக ரூ.1,000 சிறப்பு கட்டணமாக செலுத்தி தட்கல் முறையில் பதிவு செய்து கொள்ளலாம்.
கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத்தேர்வு துறை சேவை மையங்களின் விவரங்கள் மற்றும் விண்ணப்பத்தினை பதிவு செய்த விவரங்களையும், தனித்தேர்வர்களுக்கான தகுதி மற்றும் அறிவுரைகள் போன்றவற்றை http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்குனர் அறிவித்துள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்