
இனி தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ. 3,000 வரை குறையும்…!! அமெரிக்க பங்கு சந்தை நிபுணர் வெளியிட்ட அதிரடி தகவல் இதோ
நாட்டில் தங்கத்தின் விலையானது, இஸ்ரோ அனுப்பும் ராக்கெட்டின் வேகத்தை போல், நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இதனால், சாமானிய மக்கள் தங்கத்தை நினைத்து கூட பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அந்தவகையில், கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி தங்கத்தின் விலையானது ஒரு சவரன் ரூ. 68,080 க்கு விற்பனை செய்யப்பட்டது. இதையடுத்து, இன்றும் தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூ. 400 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 68,480 யை தொட்டுள்ளது.
இந்தியாவின் இறக்குமதி பொருட்களுக்கு 26% வரி விதிப்பு…!! அமெரிக்க அதிபர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு
இந்நிலையில், அமெரிக்காவை சேர்ந்த பங்கு சந்தை நிபுணர் ஜான் மில்ஸ், இதுகுறித்து ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது, “நாட்டில் தங்கத்தின் விலையானது, தற்போது விற்பனை செய்யப்படும் தங்கத்தின் விலையில் 38% அதாவது, கிராம் ஒன்றிற்கு ரூ. 3,000 வரை குறையும்” என்று தகவல் வெளியிட்டுள்ளார். மேலும், “உலகளவில் தங்கத்தின் உற்பத்தி உயர்வு மற்றும் தேவை குறைவு ஆகிய காரணங்களால், இனி வரும் காலங்களில் தங்கத்தின் விலையானது குறையும்” என்று அவர் வெளியான செய்தி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

























