
மக்களே.. இலவச குடிநீர் இணைப்பு வேணுமா…?? அப்போ மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டம் பற்றி தெரிஞ்சுக்கோங்க..
மத்திய அரசு கிராமப்புற மக்களின் நலனுக்காக பல்வேறு நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில், குறிப்பாக கடந்த 2024 ஆம் ஆண்டு முதல் ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் கிராமப்புற குடும்பங்களுக்கு குழாய்கள் மூலம் இலவச குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதுவரை, இத்திட்டம் மூலம் 1 கோடிக்கும் அதிகமான அதாவது 88.38% கிராமப்புறங்களில் உள்ள அனைத்து தனிப்பட்ட குடும்பங்களுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மீண்டும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் திடீர் பணியிட மாற்றம்…!! தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு…!!
மேலும், “இத்திட்டத்திற்கு விண்ணப்பித்த மீதமுள்ள கிராமப்புற மக்களுக்கு விரைவில் குடிநீர் இணைப்பு வழங்கப்படும்” என தமிழ்நாடு குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. மேலும், இத்திட்டத்தின் மூலம் மாதந்தோறும் ரூ. 30 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதுதவிர, மழைநீர் சேகரிப்பு, வீட்டு கழிவுநீர் மேலாண்மை மற்றும் நிலத்தடி நீர் அதிகரிப்பு போன்ற செயல்முறைகளையும் இத்திட்டம் நோக்கமாக கொண்டுள்ளது.























