
“மத்திய அரசின் ‘E – Sharam’ கார்டு மூலம் மாதம் ரூ. 1,000 பெறலாம்…!!” இதுல இவ்ளோ சலுகைகளா…?? மிஸ் பண்ணிடாதிங்க மக்களே…
மத்திய அரசு பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அதில், குறிப்பாக தற்போது பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்காக ‘E – Sharam’ கார்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தில், பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் நலிவடைந்த தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கி வருகிறது. மேலும், 2 லட்சம் வரை மருத்துவ காப்பீடு மற்றும் 60 வயதானவர்களுக்கு மாதந்தோறும் ரூ. 3,000 பென்ஷன் வழங்கப்படுகிறது.
மேலும், 18 வயது முதல் 59 வயது வரை உள்ளவர்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். மேலும், இத்திட்டத்தில் இணைய விரும்புபவர்கள் மாநில தொழிலாளர் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து விண்ணப்ப படிவங்களை பெற்றுக் கொள்ளலாம். மேலும், இந்த விண்ணப்ப படிவத்தில் தேவையான விவரங்களை பூர்த்தி செய்து அருகில் உள்ள தொழில்சார் அலுவலகத்தில் சென்று சமர்ப்பிக்கலாம்.
























