
“அரசு ஊழியர்களுக்கு ஓர் நற்செய்தி…!!” இரண்டு மடங்கு ஊதிய உயர்வு அறிவிப்பு…!! முழு விவரங்கள் உள்ளே…
மத்திய அரசு கடந்த 2016 ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட ஏழாவது ஊதிய குழு கட்டமைப்பின் கீழ் ஊழியர்களுக்கு தற்போது சம்பளம் மற்றும் அகவிலை படிகளை வழங்கி வருகிறது. இந்நிலையில், மத்திய அரசு எட்டாவது ஊதிய குழுவை பரிந்துரைத்துள்ளது. இதனால், மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் அகவிலை படிகள் இரண்டு மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த குழு அடுத்த வருடம் முதல் அமலுக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, மத்திய அரசின் எட்டாவது ஊதிய குழு அமலுக்கு வந்தால், குடிமைப் பணிகளில் (குரூப் A) பணிபுரிபவர்களின் அடிப்படை ஊதியம் ரூ. 56,100 என்பது உயர்த்தப்பட்டு ரூ 1,60,446 ஆக பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், மத்திய அரசின் நிலை 9 ல் பணிபுரியும் துணை காவல் கண்காணிப்பாளர்களின் அடிப்படை ஊதியம் ரூ. 53,100 என்பதிலிருந்து உயர்த்தப்பட்டு ரூ. 1,51,866 ஆக பெற வாய்ப்புகள் உள்ளது. மேலும், மத்திய அரசின் ஓய்வூதியதாரர்களும் இந்த பயன்களை பெறுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


























