MBA படிக்கப்போவதாக கார்த்திக்கிடம் சபதம் போட்ட சரஸ்வதி – சீரியலில் அடுத்த திருப்பம்!
எம்.பி.ஏ படித்துள்ளதாக பொய் சொல்லி ஏமாற்றி தமிழை சரஸ்வதி திருமணம் செய்து கொள்கிறார். அடிக்கடி சரஸ்வதி படிக்கவில்லை என்பதை குத்தி கட்டி கொண்டே இருப்பதால் எம்.பி.ஏ படித்து காட்டுவதாக கார்த்திக்கிடம் சரஸ்வதி சபதம் போடும் படியான ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது.
தமிழும் சரஸ்வதியும்:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்தும் மக்களின் மத்தியில் பிரபலமாகி வருகிறது. அந்த வகையில் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் தமிழும் சரஸ்வதியும் தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. படிக்காத தமிழிற்கு படித்த பொண்ணை தான் திருமணம் செய்துவைக்கவேண்டும் என்று பெற்றோர்கள் துடித்து கொண்டிருந்தனர். ஆனால் தமிழ் படிக்காத சரஸ்வதியை காதலித்து வந்தார்.
‘பாக்கியலட்சுமி’ நடிகை சுசித்ரா ரெட்டி கொடுத்த அட்வைஸ் – ரசிகர்கள் உற்சாகம்!
சரஸ்வதி எம்.பி.ஏ படித்தவர் என பொய் சொல்லி குடும்பத்தினர் அனைவரிடமும் தமிழ் சம்மதம் வாங்கி விடுகிறார். திருமணத்திற்கு பிறகு மொத்த குடும்பத்திற்கும் சரஸ்வதி எம்.பி.ஏ படிக்கவில்லை என்கிற உண்மை தெரிந்து மிக பெரிய கலவரம் ஆகிவிடுகிறது. இந்த அதிர்ச்சி தாங்க முடியாமல் கோதை அம்மாவுக்கு நெஞ்சு வலி வந்து விடுகிறது. இதன் பிறகு சரஸ்வதியை கோதை தனது மருமகளாக ஏற்றுக்கொள்ளவில்லை.
விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் நடிகர், நடிகைகள் பெறும் ஒருநாள் சம்பளம் – ரசிகர்கள் ஷாக்!
கோதை, சரஸ்வதியை எப்போது ஏற்றுக்கொள்வார் என எதிர்பார்த்துக் கொண்டிருந்த சமயத்தில் தமிழ் படிக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டி கார்த்திக் தமிழை மிகவும் அவமானப் படுத்துகிறார். மேலும், சரஸ்வதியை கார்த்திக் படிக்கவில்லை எனவும், பொய் சொல்லி ஏமாற்றி எங்கள் வீட்டிற்குள் நுழைந்தவள் தானே என அவதூறாக பேசுகிறார். இதனால் கடுப்பான சரஸ்வதி நான் எம்.பி.ஏ படித்து காட்டுகிறேன் என சவால் விடுகிறார். சரஸ்வதி இனிமேல் எம்.பி.ஏ படிப்பாரா மற்றும் சரஸ்வதியை கோதை ஏற்றுக்கொள்வாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.