நாடு முழுவதும் தற்போது லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதன் முதல் மூன்று கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில், 4வது கட்ட தேர்தல் வரும் மே 13ம் தேதி தெலுங்கானாவில் நடைபெறவுள்ளது. அன்றைய தினம், ஒரே கட்டமாக மாநிலம் முழுவதும் தேர்தல் நடப்பதால் அரசு ஊழியர்கள், தனியார் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் என அனைவர்க்கும் ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இதனை அம்மாநில தலைமை செயல் அதிகாரி சாந்தி குமாரி அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளார். வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் எனவும், அனைவரும் தவறாது வாக்களிக்க வேண்டும் எனவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், செகந்திராபாத் கண்டோன்மென்ட் தொகுதி MLA காலமானதால் அத்தொகுதிக்கும் மே 13 அன்று இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4ம் தேதியும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்படும் என்று தற்போதே குறிப்பிடப்பட்டுள்ளது.
Join Our WhatsApp Channel ” for the Latest Updates
TNPSC பொதுத்தமிழ் தேர்வு – முந்தைய ஆண்டு வினாக்கள் திருப்புதல்!!