TNPSC பொதுத்தமிழ் தேர்வு – முந்தைய ஆண்டு வினாக்கள் திருப்புதல்!!
TNPSC தமிழ் தகுதித் தேர்வு தான் தற்போது முக்கியமான பாடப் பகுதியாக மாறியுள்ளது. இலக்கணம், இலக்கியம் மற்றும் தமிழர் தொண்டு ஆகிய பாடப்பிரிவுகளில் இருந்து இத்தேர்வுக்கான வினாக்கள் கேட்கப்படும். ஆனால் மேற்கண்ட மூன்று தலைப்புகளின் கீழும் பல்வேறு உட்பிரிவுகள் இருக்கின்றன. அதனால் முந்தைய ஆண்டு கேள்விகளை ஆராய்ந்து அதில் கேட்கப்பட்டிருக்கும் கேள்விகள், அவை எடுக்கப்பட்ட பிரிவு ஆகியவற்றை ஆராய வேண்டும். அப்படி ஆராய்வதற்காக சில முக்கிய கேள்விகளை கீழே வழங்கியுள்ளோம்.
1. முடியரசன் இயற்றாத நூல் எது?
(A) பூங்கொடி
(B) நீலமேகம்
(C) வீரகாவியம்
(D) காவியப்பாவை
2. ‘பெண் எனில் பேதை என்ற எண்ணம் இந்த நாட்டில் இருக்கும் வரைக்கும் உருப்படல் என்பது சரிப்படாது’ – எனப் பாடியவர்
(A) பாரதியார்
(B) பசுவய்யா
(C)பாரதிதாசன்
(D) நாமக்கல் கவிஞர்
3. ‘கல்வி இல்லாத பெண்கள் களர்நிலம்’ என்றவர்
(A) நாமக்கல் கவிஞர்
(B) சுரதா
(C) பாரதிதாசன்
(D) பாரதியார்
4. மோனைத் தொடை வகைப்படும்.
(A) ஆறு
(B) எட்டு
(C) நான்கு
(D) மூன்று
5. புனிதமுற்று மக்கள்புது வாழ்வு வேண்டில்
புத்தகசா லை வேண்டும் நாட்டில் யாண்டும்.
இப்பாட்டிகளில் அமைந்துள்ள மோனைச் சொற்களை எழுதுக.
(A) வாழ்வு, வேண்டில்
(B) புனிதமுற்று, புத்தகசாலை
(C) நாட்டில், யாண்டும்
(D) மக்கள், புதுவாழ்வு
6. தண்டளிர்ப்பதம்’ இச்சொல்லைச் சரியாகப் பிரித்திடும் முறையைத் தேர்வு செய்க
(A) தண் + அளிர் + பதம்
(B) தன்மை + தளிர் + பதம்
(C) தண்டளிர் + பதம்
(D) தண்மை + தளிர் + பதம்
7. கலம்பகம் இச்சொல்லைப் பிரித்து எழுதுக.
(A) கலம் +அகம்
(B) கலம் + பகம்
(C) கலம்பு + அகம்
(D) கல் – அம்பகம்
8. பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல்’ என்று குறிப்பிடும் நூல்
(A) கலித்தொகை
(B) பரிபாடல்
(C) அகநானூறு
(D) புறநானூறு
(E) விடை தெரியவில்லை
9. அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல் எது?
(A) நெடுத்தொகை
(B) திருக்குறன்
(C) முத்தொள்ளாயிரம்
(D) விடை தெரியவில்லை
விடைகள்:
1-B, 2-C, 3-C, 4-B, 5-B, 6-D, 7-B, 8-C, 9-B