நாளை டாஸ்மாக் மதுபான கடைகள் மூடல் – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

0
நாளை டாஸ்மாக் மதுபான கடைகள் மூடல் - மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
நாளை டாஸ்மாக் மதுபான கடைகள் மூடல் - மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
நாளை டாஸ்மாக் மதுபான கடைகள் மூடல் – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

தமிழகத்தில் இந்த ஆண்டு மருதுபாண்டியர் குருபூஜை தினம் மற்றும் தேவர் குருபூஜை தினத்தை முன்னிட்டு நாளை (அக்.27) மற்றும் அக்.30 ஆகிய தேதிகளில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் மூடும்படிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மதுக்கடைகள் மூடல்

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் தேவர் குருபூஜை மற்றும் மருதுபாண்டியர் குருபூஜை சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த சிறப்பு நாட்களில் தமிழகத்தில் உள்ள அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், தொண்டர்கள் என பல ஆயிரக்கணக்கானவர்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மருதுபாண்டியர் மற்றும் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம்.

மத்திய, மாநில அரசு ஓய்வூதியதாரர்கள் கவனத்திற்கு – வீடுதேடி வரும் ஆயுள் சான்றிதழ்!

அந்த வகையில் இந்த ஆண்டும் மருதுபாண்டியர் குருபூஜையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதாவது இந்த பூஜைகள் கடைபிடிக்கப்படும் தினத்தை முன்னிட்டு சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை சமாளிக்க பல ஆயிரக்கணக்கான போலீஸ் அதிகாரிகள் பணியில் ஈடுபட உள்ளனர்.

தமிழக டாஸ்மாக் பணியாளா்களுக்கு 30 சதவீதம் தீபாவளி போனஸ்? அரசுக்கு வலியுறுத்தல்!

அறிவிக்கப்பட்டபடி தமிழகத்தில் மருதுபாண்டியர் குருபூஜை விழா நாளை (அக்.27) நடத்தப்பட இருக்கிறது. அதே போல அக்.30ம் தேதியன்று தேவர் குருபூஜை விழா நடத்தப்பட இருக்கிறது. அதனால் இந்த இரு நாட்களிலும் சிவகங்கை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து மதுக்கடைகளையும் அடைக்க வேண்டும் என அம்மாவட்ட ஆட்சியர் மதுசூதனன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!