தமிழக டாஸ்மாக் பணியாளா்களுக்கு 30 சதவீதம் தீபாவளி போனஸ்? அரசுக்கு வலியுறுத்தல்!
தமிழகத்தில் டாஸ்மாக் பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் தொகை 10 சதவீதம் வழங்கப்பட்டுள்ள நிலையில் அதனை 30 சதவீதமாக மாற்ற வேண்டும் அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்க சிறப்புத் தலைவர் கு.பாலசுப்பிரமணியன் கோரியுள்ளார்.
தீபாவளி போனஸ்:
ஒவ்வொரு பண்டிகை காலத்தின் போதும் பல்வேறு அரசு மற்றும் தனியார் துறையை சேர்ந்த ஊழியர்களுக்கு போனஸ் தொகை உள்ளிட்ட சில பரிசுகள் கொடுக்கப்படுவது வழக்கமாகும். அந்த வகையில் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகை சமயத்தில் போனஸ் வழங்கப்படும். அடுத்த மாதம் வரவிருக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசின் பல்வேறு துறையில் பணிபுரிபவர்களுக்கு போனஸ் தொகை வழங்கப்படுகிறது. இந்நிலையில் டாஸ்மாக் உள்ளிட்ட பல்வேறு துறை பணியாளர்களுக்கு 10 சதவீத போனஸ் அறிவித்துள்ளது தமிழக அரசு.
தமிழக அரசின் 10.5% இடஒதுக்கீடு – உயர்கல்வித்துறை முக்கிய உத்தரவு!
இது குறித்து அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்க சிறப்புத் தலைவர் கு.பாலசுப்பிரமணியன் கூறியதாவது, திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது டாஸ்மாக் பணியாளர்களுக்கு 30 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும் என வலியுறுத்தியது. ஆனால் தற்போது ஆளும் கட்சியாக இருக்கும் நிலையில் 10 சதவிகித போனஸ் வழங்கியுள்ளதாக குற்றம் சாட்டினார். தற்போது திலகத்தின் வருவாயில் 4ல் ஒரு பங்கு டாஸ்மாக் மூலம் கிடப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கோவாக்ஸின் தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் கவனத்திற்கு – WHO முக்கிய அறிவிப்பு!
எனவே டாஸ்மாக் ஊழியர்களுக்கு 30 சதவிகித போனஸ் வழங்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அதேபோல் சிறு குற்றங்களில் ஈடுபடும் டாஸ்மாக் பணியாளர்களை கிடங்குகளுக்கு பணியிட மாற்றம் செய்வது, குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அவர்களை மீண்டும் கடைக்கு இடமாற்றம் செய்வது வழக்கமான நடைமுறையாக இருந்து வருகிறது. ஆனால், கடலூர், தூத்துக்குடி மாவட்டங்களில் இவ்வாறு கிடங்குகளுக்கு அனுப்பப்பட்டவர்கள் மீண்டும் கடைகளுக்கு திருப்பி அனுப்பப்படவில்லை எனவும் பளு அதிகம் உள்ள கடைகளுக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.