தமிழகத்தில் 3 நாட்களுக்கு மதுபான கடைகள் மூடல் – வெளியான முக்கிய அறிவிப்பு!

0
தமிழகத்தில் 3 நாட்களுக்கு மதுபான கடைகள் மூடல் - வெளியான முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் 3 நாட்களுக்கு மதுபான கடைகள் மூடல் - வெளியான முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் 3 நாட்களுக்கு மதுபான கடைகள் மூடல் – வெளியான முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் மதுரை மாவட்டத்தில் மருது சகோதரர்கள் குருபூஜை மற்றும் தேவர் குருபூஜையை முன்னிட்டு மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் இயங்காது என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

டாஸ்மாக் கடைகள்

தமிழகத்தில் அக்.27 ஆம் தேதி மருதுபாண்டியர்கள் நினைவுநாள் மற்றும் அக். 30 ஆம் தேதி தேவர் குருபூஜை நடைபெற இருக்கிறது. அதனால் மதுரை மாவட்டத்தில் மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில், 27.10.2023 சிவகங்கை மாவட்டத்தில் நடைபெறும் மருதுபாண்டியர் நினைவு தினத்தை முன்னிட்டும், 29.10.2023 மற்றும் 30.10.2023 இராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெறும் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் திருமகனாரின் ஜெயந்தி குருபூஜை தினவிழாவை முன்னிட்டும் அக் 27, 29, 30 ஆகிய 3 நாட்கள் மதுபான கடைகள் இயங்காது.

3 மாநில அரசு ஊழியர்களுக்கு வெளியான தீபாவளி பரிசு – மகிழ்ச்சியில் பணியாளர்கள்!

அதாவது அந்த 3 நாட்களில் FL1/FL2/FL3/FL3A/FL4A மற்றும் FL11 ஆகிய உரிமம் பெற்றுள்ள அனைத்து மதுபான சில்லரை விற்பனை கடைகள், மனமகிழ் மன்றங்கள், தங்கும் விடுதியுடன் கூடிய மது அருந்தகம், படை வீரர் கேண்டீன் மற்றும் அயல்நாட்டு மதுபான சில்லரை விற்பனை கடைகள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!